Advertisment

சென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி

Chennai COVID-19 Report: சென்னையில் மொத்த பாதிப்பு 1,07,109 ஆக உயர்ந்தது

author-image
WebDesk
New Update
சென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி

ஒரே நாளில் 67,352 பேருக்கு கொரோனா பரிசோதனை

TN Corona Virus Cases Today: தமிழகத்தில் இன்று (ஆக.7) மொத்தம் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,85,024-ல் சென்னையில் மட்டும் 1,07,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,27,575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 24 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,14,931.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,896 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை!

தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 65 தனியார் ஆய்வகங்கள் என 126 ஆய்வகங்கள் உள்ளன.

பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,759.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 30,88,066.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,352.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,85,024.

இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,880.

சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 984.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,72,334 பேர் / பெண்கள் 1,12,663 பேர் / மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் .

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,445 பேர். பெண்கள் 2,435 பேர்.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,488 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,27,575 பேர்.

சென்னையிலும் லெபனான் விபத்து அபாயம்: அதிகாரிகள் உஷார் நடவடிக்கை

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 119 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 78 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,690 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,272 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 115 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 4 பேர்"

என்று சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment