Advertisment

தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 12 பேர் பலி: இதுவரை 145 பேர் மரணம்

COVID-19 Tamil Nadu Cases: 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, corona latest news, coronavirus update in india, , coronavirus news update, coronavirus latest news update, coronavirus death toll, corona virus, corona virus in south india, corona virus news update,chennai, tamil nadu chennai koyembedu, modi, dmk கொரோனா வைரஸ், தமிழ்நாடு, கொரோனா வைரஸ் தொற்று, பாதிப்பு, கொரோனா சோதனை, சென்னை, மத்திய உள்துறை அமைச்சகம், ஊரடங்கு

TN Latest News Live Updates

தமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,372-ஆக அதிகரித்துள்ளது. அதோடு ஒரே நாளில் 12 பேர் மரணித்திருக்கிறார்கள். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்திருக்கிறது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த வழக்கு : செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் இன்று (மே.28) மேலும் புதிதாக 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18,545 -ல் இருந்து 19,372 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்தது.

பிரான்ஸ் (15%), இத்தாலி (14%), இங்கிலாந்து (14%) போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.7% என மிகக் குறைவானதாகவே உள்ளது.

அப்போ ஒயின், இப்போ பீர்: மகன்களோடு வசமாக போலீஸில் மாட்டிக் கொண்ட சென்னை பெண்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,159 குழந்தைகள் குணப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்று 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரு நாளில் 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment