முகக்கவசம் உற்பத்தி வழிமுறைகள் என்னென்ன?.. அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

முகக்கவசம் அணியாமல் செல்பவரிடம் அபராதம் வசூலிப்பதற்கு தடை

முகக்கவசம் அணியாமல் செல்பவரிடம் அபராதம் வசூலிப்பதற்கு தடை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak, covid-19,masks, coronavirus,Health department,,anna university,Alagappa College of Technology

corona virus mask : முகக்கவசங்களுக்கான உற்பத்தி, விற்பனை, தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கொரனோ தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், 3 லேயர் மாஸ்க், N95 மாஸ்க், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மாஸ்க், காட்டன் மாஸ்க் மற்றும் வெட்டி வேரால் செய்யப்பட்ட மூலிகை மாஸ்க் என, பல மாஸ்க்குகள் விற்கப்படுகின்றன.

இதுமட்டுமல்லாமல் தங்களுடைய முகங்கள் போல் மாஸ்க்கில் அச்சிட்டு அதை பயன்படுத்துவதும் வகையிலும் மக்களை கவரும் வகையிலும் பல விதமான மாஸ்க்குகள் அறிமுகமாகியுள்ளன.

எந்த முகக்கவசங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், அதை விலை, தரம் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனம், முக கவசம் காலவதியாகும் தேதி போன்ற விதிகளை உருவாக்கக் கோரி சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

அந்த மனுவில், முகக் கவசம் தொடர்பான தெளிவான விதிமுறைகளை வகுத்து அரசு அறிவிக்கவில்லை என்றால், முகவசத்தை யார் வேண்டுமானலும் உற்பத்தி செய்து, அவர்கள் விருப்பட்ட விலைக்கு, ரசிது ஏதும் இன்றி விற்கும் சூழலும் உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த முகக்கவசத்தை எந்தெந்த வயதினர் அணிய வேண்டும், உற்பத்தி, விலை, தரம், காலாவதி காலம் உள்ளிட்டவை குறிப்ப்பிட்டு முகக்கவசத்திற்கான விதிமுறைகளை வெளியிட வேண்டும் எனவும், அதுவரை முகக்கவசம் அணியாமல் செல்பவரிடம் அபராதம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம்?

முகக்கவசத்தை பயன்படுத்துவது மற்றும் பயன்படுத்திய பின்னர் அதை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, முக கவசம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என விதிமுறைகள் வகுக்கபட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் தற்போதைய சூழ்நிலை கருத்தில் கொண்டு பொதுமக்களும் தங்களுக்கான பொறுப்புணர்வு செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்து , விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Coronavirus Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: