Advertisment

தமிழகத்தில் புதிதாக 4,985 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1.75 லட்சம் கடந்தது

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,687 பேருக்கு தொற்று

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் புதிதாக 4,985 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1.75 லட்சம் கடந்தது

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்வு

Tamil Nadu Corona Report Today: தமிழகத்தில் இன்று (ஜூலை 20) புதிதாக 4,985 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆகவும், பலி எண்ணிக்கை 2,551 ஆகவும் அதிகரித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், ""தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,930 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 65 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 112 ஆய்வகங்கள் (அரசு-57 மற்றும் தனியார் 55) மூலமாக, இன்று மட்டும் 52,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 19 லட்சத்து 84 ஆயிரத்து 579 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,921 பேர் ஆண்கள், 2,064 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,06,828 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 57,467 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 3,861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக உள்ளது.

கலை,அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

சென்னை நிலவரம்

சென்னையில் இன்று 1,298 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,269 பேர் குணமடைந்தனர். மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு - 87,235 என்ற அளவில் உள்ளது.

சென்னையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 70,651.

சிகிச்சையில் உள்ளவர்கள் - 15,127.

சென்னையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை - 1,456.

சென்னைக்கு அடுத்ததாக மாநிலத்தில் அதிகளவாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 454 பேர், செங்கல்பட்டில் 354 பேர், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 52,087 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 70 பேர் உயிரிழந்தனர். அதில், 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 49 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,551 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,348 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 8,776 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,45,220 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21 ஆயிரத்து 682 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக இன்று (ஜுலை.20) பதிவான கொரோனா பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,298

திருவள்ளூர் - 454

செங்கல்பட்டு - 354

காஞ்சிபுரம் - 329

தூத்துக்குடி - 200

நெல்லை - 180

விருதுநகர் - 169

தி.மலை - 151

கோவை - 139

வேலூர் -114

தேனி -107

மதுரை -106

தென்காசி -103

குமரி - 90க.குறிச்சி-89

விழுப்புரம்-87

கடலூர்-87

தஞ்சை-83

ராமநாதபுரம்-82

சிவகங்கை-80

சேலம்-79

ரா.பேட்டை-79

திண்டுக்கல்-78

திருச்சி-77

பு.கோட்டை-71

திருவாரூர்-46

திருப்பூர்-38

தர்மபுரி-36

ஈரோடு-31

நீலகிரி-27

கிருஷ்ணகிரி-26

நாமக்கல்-25

அரியலூர்-14

கரூர்-10

பெரம்பலூர்-7

நாகை-3

திருப்பத்தூர்-2

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment