/tamil-ie/media/media_files/uploads/2018/09/12109CNI_THANIPPADI_2-1-1140x620.jpg)
பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர்
பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் தற்கொலை முயற்சி. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் தானிப்பாடியில் பேன்சி கடை வைத்திருக்கிறார் ராஜேஷ் என்பவர். அவரின் கடைக்குள் புகுந்த திமுக தொண்டர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை சரமாரியாக இருவரும் தாக்கினர்.
மேலும் படிக்க : தொடர்ந்து பிரச்சனைகளில் ஈடுபட்ட வரும் திமுகவினர்
பின்னர், அந்த இரு நபர்களில் ஒருவர் தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து ராஜேஷை சரமாரியாக தாக்கினார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவியது.
பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் தற்கொலை முயற்சி
அடிவாங்கிய பேன்சி கடை உரிமையாளர் மனம் உடைந்து விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள் பூபாலன் மற்றும் பவுன்குமாரை கைது செய்தது காவல் துறை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த செல்போன் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும் திமுகவினர் தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட திமுக தொண்டர்களை அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.