தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு

பிப்ரவரி 24 ம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிப்ரவரி 24 ம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin, chennai high court

MK Stalin, chennai high court

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மாநகராட்சி டெண்டர் முறைகேடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தியதால், தன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. எனவே தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கரெக்ட்டான ‘ஷேப்’ வேணுமா? அப்போ தீபிகா படுகோன் பண்ற பயிற்சியை பாருங்க!

Advertisment

உள்ளாட்சி துறை ஊழல் துறையாக மாறிவிட்டது எனவும், அதில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் ஊழலுக்கு துணை போயி இருப்பதாகவும், எம் சாண்ட் வாங்கியதில் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி முரசொலியில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இது குறித்து அமைச்சர் வேலுமணி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 24 ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜாராக நேற்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், மாநகராட்சி டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் பல தகவல்களை வெளியிட்டது. இதே போல் ஆற்றுமணலுக்கு பதிலாக எம் சாண்ட் பயன்படுத்தி அரசு டெண்டர்களில் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியிருந்தது.

Advertisment
Advertisements

இதன் அடிப்படையிலும், எதிர்கட்சி தலைவர் என்ற முறையில், ஊழல் நடந்திருப்பது குறித்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தான் அறிக்கை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

9 வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் கண்ணீர் வடித்த தருணம்! – லாரியஸ் விருதில் நெகிழ்ந்த சச்சின்

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கை திசை திருப்பும் நோக்கிலேயே தன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே அமைச்சர் வேலுமணி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த வழக்கில் பிப்ரவரி 24 ம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Dmk M K Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: