Dr Simon Hercules Death : சென்னை அமைந்தக்கரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். அவர் நரம்பியல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார்.
டி.பி. சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லறைத் தோட்டத்தில் அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள், அவரது உடலை புதைக்க விடாமல் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்ஸ் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அங்கு வன்முறையில் ஈடுபட்ட 14 நபர்களையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் ஒரு பெண் உட்பட அவர்கள் 14 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.