Advertisment

தீவிர கண்காணிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி; அசம்பாவிதம் ஏற்படாது – துரைமுருகன் உறுதி

செம்பரம்பாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் எந்த அசம்பாவிதமும் நேராது. முகலிவாக்கம், மாங்காடு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட செம்பரம்பாக்கம் காரணமல்ல – அமைச்சர் துரைமுருகன் பேட்டி

author-image
WebDesk
New Update
செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 2000 கனஅடியாக உயர்வு: மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் அதிக மழையைப் பெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக கனமழையை எதிர்கொண்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்: கோவையில் மரக் கன்றுகளை பிடுங்கி வீசிய தி.மு.க கவுன்சிலர்: பா.ஜ.க ‘மர அரசியல்’ செய்வதாக புகார்

இதனிடையே சென்னைக்கு அருகே, சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியில் தற்போது வினாடிக்கு 3,675 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் 60 பில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது. ஏரி வேகமாக நிரம்பி வருவதால் கூடுதல் உபரி நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பொதுப்பணி துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும், பிரச்சினை இல்லை. 16 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் எந்த அசம்பாவிதமும் நேராது. முகலிவாக்கம், மாங்காடு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட செம்பரம்பாக்கம் காரணமல்ல, என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment