Advertisment

மதுவில் விஷம் கலந்து மாமனார் கொலை: பணத்தை அபகரிக்க மருமகன் நடத்திய கொடூரம்

பணத்திற்காக மதுவில் விஷம் கலந்து மாமனாரை கொன்ற மருமகன் கைது; பொள்ளாச்சி அருகே பரபரப்பு

author-image
WebDesk
New Update
மதுவில் விஷம் கலந்து மாமனார் கொலை: பணத்தை அபகரிக்க மருமகன் நடத்திய கொடூரம்

வலது பக்கத்தில் இருப்பவர் உயிரிழந்த விவசாயி மனோகரன், நடுவில் இருப்பவர் அவரது நண்பர் வேலுச்சாமி, கடைசி படம் கைது செய்யப்பட்டுள்ள மருமகன் சத்தியராஜ்

பொள்ளாச்சி அருகே மது குடித்த விவசாயிகள் இருவர் மரணமடைந்த நிலையில், பணத்திற்காக அவர்களில் ஒருவரின் மருமகனே விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பொள்ளாச்சி அருகே நெகமத்தில் மது அருந்தி இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படியுங்கள்: வியாழக்கிழமை இ.பி.எஸ் அ.தி.மு.க அலுவலகம் வருகை: தொண்டர்கள் திரண்டு வர அழைப்பு

நெகமம் அடுத்த பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (56), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (58) கூலித்தொழிலாளி.

இருவரும் நேற்று முன்தினம் நெகமம் அடுத்துள்ள பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் பகுதியில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது இருவரும் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச்சாரயமா? என்ற கோணத்தில் நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து விசாரணையில் பலியான மனோகரன் அவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றை விற்று நிறைய பணம் வைத்துள்ளார். தோட்டம் விற்ற பணத்தை கொண்டு நண்பர்களுடன் மது குடித்து ஜாலியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் மனோகரன் உறவினரான அதே பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் வயது 30, இவர் பாப்பம்பட்டியில் உள்ள தனியார் கோழித்தீவன கம்பனியில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.

இவரும் இறந்து போன மனோகரின் மகள் மாசிலாமணியும் வயது 25, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் உள்ளார்.

மனோகரன் அவ்வப்போது மருமகன் சத்தியராஜ் இடம் மது இருந்தால் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி குடித்து வந்து உள்ளார். இதைப் பயன்படுத்திய சத்தியராஜ் மாமனாரிடம் பணம் நிறைய இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து வைத்துள்ளார். மாமனார் மனோகரன் மருமகன் சத்தியராஜிடம் வழக்கம் போல மது கேட்டு உள்ளார்.

அப்போது விஷம் கலந்த மதுவை மனோகரனிடம் வாங்கிக்கொண்டு தனது உறவினரான வேலுச்சாமி தோட்டத்தில், அவரும் வேலுச்சாமியும் மது அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கிய உயிரிழந்துள்ளனர். போலீஸ் விசாரணையில், மனோகரன் அருந்திய மதுவில் மருமகன் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.

இதை அடுத்து நெகமம் காவல் நிலைய போலீசார் சத்யராஜ்-ஐ கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பணத்திற்காக மாமனாரை மருமகன் மதுவில் விஷம் வைத்து கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment