/tamil-ie/media/media_files/uploads/2022/12/Masthan.jpg)
தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான் இன்று (டிசம்பர் 22) காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தார்.
இதையும் படியுங்கள்: எந்த பாசிச சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது: ஸ்டாலின் முன்னிலையில் சூரியனார் சுவாமிகள் பேச்சு
இந்தநிலையில், இன்று காலை சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, டாக்டர் மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு தி.மு.க.வினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், டாக்டர் மஸ்தான் மகனுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக நேற்று மாலை முழுவதும் உறவினர்களை அழைத்து பத்திரிகை வைத்துள்ளார். இந்தநிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.