சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமிர்த கலச யாத்திரையை ஆளுனர் ஆர்.என். ரவி தொடங்கிவைத்தார்.
அப்போது, “சுதந்திரத்திற்காக போராடிய மருது சகோதரர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்? என வருந்தினார். தொடர்ந்து, “மொழி அடிப்படையிலும், மத அடிப்படையிலும் நாம் பிரிந்து காணப்படுகிறோம்; நாம் இவ்வாறு பிரிந்து இருக்க சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகம் செய்யவில்லை” என்றார்.
இதையும் படிங்க : சென்னை போலீஸ் மீது ஆளுனர் மாளிகை பகிரங்க புகார்: 'நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொலை செய்யப்படுகிறது'
தொடர்ந்து, “சுதந்திரம் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. நாம் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தோம்” எனத் தெரிவித்தார். முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுனர் திராவிடம் மற்றும் கால்டுவெல் குறித்து கேள்வியெழுப்பினார்.
இதற்கு திராவிட தலைவர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர். ஆளுனரின் மருது சகோதரர்கள் தொடர்பான கேள்விக்கு திமுக மூத்தத் தலைவர் டி.ஆர். பாலு பதில் அளித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“