Advertisment

ஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது - ஐகோர்ட்

வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் ஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹெச்.ராஜா கைது குறித்து ஐகோர்ட்

ஹெச்.ராஜா கைது குறித்து ஐகோர்ட்

ஹெச்.ராஜா கைது குறித்து ஐகோர்ட் : ஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisment

ஹெச்.ராஜா, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரத்தில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போலீஸார் 8 பிரிவுகளில் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் படிக்க: ஹெச்.ராஜாவை முடிந்தால் கைது செய்து பார்.. சவால்விட்ட பாஜக தொண்டர்

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் அமர்வில் சில வழக்கறிஞர்கள் எச்.ராஜா குறித்து முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்தது. மேலும், 4 வாரத்திற்குள் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் ஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறியுள்ளது.

மேலும் படிக்க : ஹெச்.ராஜா குறித்து வெளிவராத மற்றொரு வீடியோ

Chennai High Court Bjp H Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment