/tamil-ie/media/media_files/uploads/2017/09/Rain.jpg)
Rain, மழை
தமிழகத்தில் கன மழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளம் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் ரெட் அலர்ட் தரப்பட்டிருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் படிக்க : ரெட் அலர்ட் என்றால் என்ன?
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், நாகை, திருநெல்வேலி, கடலூர், தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருக்கும் குற்றால அருவியில் குளிப்பதற்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் கனமழை பெய்தது. இன்றைய வானிலை அறிக்கைப் பற்றிய செய்தியைப் படிக்க
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.