Advertisment

ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது எப்படி? அண்ணன் கூறிய அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது எப்படி என்பது குறித்து அவரின் அண்ணன் அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அன்று நடந்தது என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How Bahujan Samaj Tamil Nadu State President Armstrong was murdered

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஜூலை 5ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5ஆம் தேதி இரவு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு கொல்லப்பட்டார். அவரின் பிறந்த தினத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் கொலை சம்பவத்தின் போது அருகில் இருந்த ஆம்ஸ்ட்ராங் அண்ணன் வீரமணி கூறுகையில், “உணவு டெலிவரி செய்வது போல் வந்தனர். ஆம்ஸ்ட்ராங் அருகில் இருந்த பாலாஜியிடம் உணவு டெலிவரி வந்துள்ளதாக கூறினார்கள். எந்த உணவு என்று கேட்கையில் அவரை தள்ளிவிட்டுவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள். தகவல் அறிந்து வந்த எனக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்” என்றார்.

Advertisment

இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் கொலை; சி.பி.ஐ விசாரணை கோரிக்கை: தொல். திருமாவளவன் ஆதரவு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Bahujan Samaj Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment