இந்தியாவில் 55 முக்கியமான இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுப்பது தொடர்பான ஒப்பந்தம் இன்று டெல்லியில் கையெழுத்தாகிறது. தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் மற்றும் மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் உருவான நிலையில் இத்திட்டத்தினை நிறுத்தி வைத்திருந்தனர்.
தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்
தற்போது தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அமைச்சகம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்திற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சிதம்பரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. காவேரி டெல்டா பகுதியில் இருக்கும் இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனம் செயல்பட இருக்கிறது. இது தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தம் இன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தாகிறது.
மேலும் படிக்க ஐந்து மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்ட ஒ.என்.ஜி.சி
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்ற போது மக்கள் அதற்கு பல்வேறு விதமான எதிர்ப்புகளை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.