Kamal Haasan Tweet : கமல் ஹாசனின் சர்ச்சைக் குறித்த பேச்சினைத் தொடர்ந்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கமல் ஹாசன். பிரச்சாரம் முடிந்து கூட்டத்தில் இருந்து வெளியேறும் போது கமல் ஹாசனின் மீது முட்டை, கல், செருப்பு போன்றவைகளை வீசி தாக்குதலில் ஈடுபட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இம்முயற்சியை மேற்கொண்ட மூவர் மீது புகார் அளிக்கப்பட்டதாக அக்கட்சியின் உறுப்பினர் ஸ்நேகன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று தன் கட்சித் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே!
— Kamal Haasan (@ikamalhaasan) 16 May 2019
திருச்சியில் இருந்து இன்று காலை சென்னை வந்தடைந்தார் கமல் ஹாசன். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கமலின் பதில்கள்
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Kamal haasan tweet asks party cadres do not be drawn into the violence
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்