கேரளா வெள்ள பாதிப்புக்கு தமிழகம் தான் காரணம் என்பது தவறு : முதல்வர் பழனிசாமி விளக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala blame tamilnadu, கேரளா

kerala blame tamilnadu, கேரளா

கேரளா வெள்ள பாதிப்புக்கு கோரிக்கையை மீறி முல்லைப்பெரியாறு அணையை திறந்துவிட்ட தமிழகமே காரணம் என்ற கேரள அரசின் குற்றச்சாட்டு தவறானது என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த கேரளா:

Advertisment

கேரளா மாநிலத்தில் பெய்து வந்த கனமழையின் காரணமாக இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் இடுக்கி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. பின்னர் ஓயாது பெய்த மழையாலும், கேரளாவில் இருந்த அணைகள் நிரம்பியதாலும் அம்மாநில அரசு 33 அணைகளை திறந்துவிட்டது.

இதனால் கேரளா முழுவதும், வெள்ளப்பெருக்கு ஓடியது. சுமார் 360 பேர் பலியாகினர். இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்களில் வீடு மற்றும் உடமைகளை இழந்தனர்.

ஏற்கனவே அம்மாநிலத்தை வெள்ளம் பாதித்திருந்ததால் அணையில் அளவை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைத்துக்கொள்ளுமாறு கேரள முதல்வர் பிணராயி விஜயன் தமிழக அரசிடம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.

Advertisment
Advertisements

கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக முதல்வருக்கு கடிதம்... முல்லைப்பெரியாறு நீர்மட்டம் குறைக்க கோரிக்கை

அவரின் இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் பழனிசாமி ஏற்க மறுத்துவிட்டார்.

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கத் தேவையில்லை - முதல்வர் பழனிசாமி கடிதம்

இந்நிலையில், முல்லைப்பெரியாரு அணையின் அளவை குறைக்க மறுத்ததால், வெள்ள பாதிப்பிற்கு தமிழக அரசு தான் காரணம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

edappadi palanisamy, கேரளா

இந்த குற்றச்சாட்டு தவறானது என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். முக்கொம்பு அணையின் மதகு உடைப்பை பார்வையிடச் சென்ற முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்காததால், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை.  பல்வேறு அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர் வந்ததன் காரணமாக  கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது.

முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது.  கேரளாவின் 80 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது தான் வெள்ளத்தின் காரணமே தவிற தமிழக அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது.” என்றார்.

Kerala Flood Edappadi K Palaniswami Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: