/tamil-ie/media/media_files/uploads/2022/09/Kovai-SP.jpeg)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜர் நகர், நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ் (21). பி.எஸ்.சி ஐ.டி பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் மேட்டுப்பாளையத்தில் இந்து இளைஞர் முன்னணி நகர பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன் பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: கோவை: தென்னை மரங்களில் மின் இணைப்பு; இளைஞர் பலி; 6 பேர் கைது
இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாதிக்கப்பட்டவர்களிடம் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் விசாரணையை மேற்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தெரிந்தவுடன், இந்து முன்னணி கோவை கோட்டச் செயலாளர் ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், துணைத் தலைவர் தங்கவேலு, தனபால் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.