தூய்மை பணியாளர்களை தேசிய கொடி ஏற்ற வைத்த விஜய் ரசிகர்கள்; கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்

கோவையில் தூய்மை பணியாளர்களை தேசிய கொடி ஏற்ற வைத்த விஜய் ரசிகர்கள்; பொதுமக்கள் பாராட்டு

கோவையில் தூய்மை பணியாளர்களை தேசிய கொடி ஏற்ற வைத்த விஜய் ரசிகர்கள்; பொதுமக்கள் பாராட்டு

author-image
WebDesk
New Update
Kovai Vijay fans

கோவையில் தூய்மை பணியாளர்களை தேசிய கொடி ஏற்ற வைத்த விஜய் ரசிகர்கள்; பொதுமக்கள் பாராட்டு

கோவையில் 77 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை வைத்து தேசிய கொடியேற்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாட்டின் 77 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

publive-image

இதையும் படியுங்கள்: மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி: கோவையில் சுதந்திர தின விழா கோலாகலம்

Advertisment
Advertisements

தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களை அழைத்து கௌரவித்தனர். பின்னர் அவர்களை கொடியேற்ற வைத்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

publive-image

பொதுவாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்வுக்கு மாறாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைத்த இந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: