Advertisment

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிடும்; கே.எஸ். அழகிரி உறுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. எனவே இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

author-image
WebDesk
New Update
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிடும்; கே.எஸ். அழகிரி உறுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரசின் தொகுதி என்றும், பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

Advertisment

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: தி.மு.க பேச்சாளர் மீது ஆளுநரின் செயலாளர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல்

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் கடந்த முறை தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டதால், இந்த முறை காங்கிரஸ் களமிறங்குமா அல்லது தி.மு.க.,வே நேரடியாக களமிறங்குமா என எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

இந்தநிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. எனவே இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். தி.மு.க மற்றும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களை வியாழன் மாலை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்க உள்ளேன், என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Erode K S Alagiri Congress Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment