/tamil-ie/media/media_files/uploads/2018/10/IMG-20181002-WA0136.jpg)
குமரி அனந்தன் உண்ணாவிரதம்
குமரி அனந்தன் உண்ணாவிரதம் : காந்தியவாதிகள் என்றுமே போராட்டத்தைக் கூட அறநெறியில் தான் வழி நடத்துவார்கள். அகிச்மை கொண்டு எதையும் வென்றிட இயலும் என்று தீர்க்கமாக நம்பிய காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், மூத்த காங்கிரஸாருமான குமரி அனந்தன் இன்று உண்ணாவிரத போராட்டம் ஒன்றிற்கு தலைமை ஏற்றுள்ளார்.
குமரி அனந்தன் உண்ணாவிரதம்
பூரண மதுவிலக்கி வலியுறுத்தி சென்னையில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தில் குமரி அனந்தன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் இன்று உண்ணாவிரத்ததை மேற்கொண்டு வருகிறார்கள். போராட்டத்தில் பங்கேற்ற குமரி அனந்தன் “குடிப்பதற்காக செலவு செய்கிறேன் என்று கூறும் கருணாஸை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்த முழுமையான செய்தியைப் படிக்க
இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று, குமரி அனந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார். பின்னர் தன்னுடைய சிறு உரை ஒன்றை அங்கே நிகழ்த்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.