Latest Tamil News : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்துடன்.
Live Blog
Tamil Nadu Breaking News : நீட் தேர்வு குறித்த அரசியல் தலைவர்களின் கருத்துகள், நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல், மற்றும் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த முழுமையான தகவல்களை இங்கே பெற்றிடவும்.
கடந்த ஆண்டு நிரந்தரமாக தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கலைக்கும் பொருட்டு கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டது தமிழக காவல்துறை. இதில் 13 நபர்கள் உயிரிழந்தனர். அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 268 நேரில் விளக்கம் அளித்ததாக கூறப்பட்டு வருகிறது. 10ம் தேதி வரை இந்த விசாரணை நடைபெற்று வரும்.
நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் தனிப்பிரிவினை உருவாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவில்லை என்றால் காவல்துறையினர் கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக இன்று நடைபெற்றது ஆலோசனைக் கூட்டம்.
பொதுப்பணிப் துறை, வருவாய் துறை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துதல் குறித்து எடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கைகள் என்னென்ன என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். அது குறித்த முழுமையான அப்டேட்டினை தெரிந்து கொள்ள
நாளை முதல் ரமலான் நோன்பு துவக்கம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். வாழ்த்து செய்திகளை டவுன்லோடு செய்து உங்களின் உறவினர்களுக்கு அனுப்ப
காரப்பாக்கம், பூந்தமல்லி, சமயபுரம் ஆபிசர் காலனி, ராஜேஸ்வரி காலனி, திருமுருகன் நகர், செட்டியார் அகரம், ஓம் சக்தி நகர், விவேகானந்தர் நகர் ஆகிய இடங்களில் நாளை மின்வெட்டு.
காரப்பாக்கம், பூந்தமல்லி, சமயபுரம் ஆபிசர் காலனி, ராஜேஸ்வரி காலனி, திருமுருகன் நகர், செட்டியார் அகரம், ஓம் சக்தி நகர், விவேகானந்தர் நகர் ஆகிய இடங்களில் நாளை மின்வெட்டு.
அறந்தாங்கி, கள்ளக்குறிச்சி, மற்றும் விருதாச்சலம் எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் கொடுத்த நோட்டீஸிற்கு தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க
கொள்கை அடிப்படையில் தான் பாஜக, பாமக போன்ற கட்சிகளை நான் எதிர்க்கின்றேன். நான் பாமக தலைவர் ராமதாஸை போட்டியாக கருதவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட உரையில் பேசினார். இளைஞர்கள் மத்தியில் கல்வி அறிவை வளர்ப்பதற்கு பதில் வன்முறையை தூண்டும் போக்கினை தான் நாங்கள் எதிர்க்கின்றோ என்றும் கூறினார் திருமாவளவன்.
தமிழகத்தில் வெளி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி தமிழக இளைஞர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் துரோகம் இழைத்துவிட்டதாக திமுக குற்றச்சாட்டு. இது குறித்த ட்வீட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.
தமிழக இளைஞர்களுக்கு துரோகமிழைக்கும் BJP - ADMK அரசுகள்!
கழக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 சதவீத முன்னுரிமை என்பது உறுதி செய்யப்பட்டு - தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு பெறுகின்ற நிலையை உருவாக்குவோம்! pic.twitter.com/xokcJTptjM
— M.K.Stalin (@mkstalin) 6 May 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights