Advertisment

அறநிலையத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இந்து என உறுதி ஏற்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், இந்து அறநிலைய துறை நியமிக்கப்பட்ட ஆணையர் மற்றும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் என்பதால் உறுதிமொழி எடுக்கவில்லை எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் உறுதி மொழி எடுக்கும் விதி பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அறநிலையத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இந்து என உறுதி ஏற்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

இந்து அறநிலையதுறையில் பணியாற்றும் அனைத்தும் அதிகாரிகளும், தாங்கள் இந்து மதத்தை பின்பற்றுவதாக எட்டு வாரங்களில் புதிதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், அத்துறையின் ஆணையர், பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன், அருகிலுள்ள கோவிலில் உள்ள முதன்மை தெய்வத்தின் முன், தான் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், உறுதிமொழி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

"போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு" - குடிநீர் ஆலைகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

இந்த சட்டப்பிரிவுகளின் படி தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் எந்த உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளதாக கூறி இந்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென என சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், இந்து அறநிலைய துறை நியமிக்கப்பட்ட ஆணையர் மற்றும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் என்பதால் உறுதிமொழி எடுக்கவில்லை எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் உறுதி மொழி எடுக்கும் விதி பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் - தடை விதிக்க பரிந்துரை

இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்து அறநிலையத்துறை விதிகளின் படி, கோவிலில் பணியாற்றும் ஆணையர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும், தாங்கள் இந்து மதத்தை பின்பற்றுவதாக எட்டு வாரங்களில் புதிதாக உறுதிமொழி ஏற்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment