சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரிக்கு தினம், தினம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கடல் நடுவே இருக்கும் திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றை பார்க்க சுற்றுலா பயணிகள் படகில் சென்று வருகின்றனர்.
ஆனால் கடலில் இயற்கையாக ஏற்படும் கடல் நீர் உள்வாங்கும் காலங்களில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் படகு, திருவள்ளுவர் சிலை பாறைக்கு செல்லமுடியாத சூழல் உள்ளது. இந்த நிலை ஏற்படும் போதொல்லாம் தமிழ் மொழி பேசும் மக்கள் மனதில் ஏற்படும் வேதனை, இவ்வளவு தூரம் கன்னியாகுமரி வந்தும் உலகப் பொதுமுறை தந்த ஐயன் வள்ளுவன் பாதம் தொட்டு வணங்க முடியவில்லையே என்பதாக உள்ளது. இந்த நிலை கடந்த பல காலமாக உள்ளது.
இதையும் படியுங்கள்: கோவையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ10 உயர்வு; அமலுக்கு வந்தது புதிய சட்டம்
இந்தநிலையில், தமிழக சட்டமன்றத்தில் நெடுஞ்சாலை
இந்த அறிவிப்பைக் கண்டு குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி அமைப்பினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் அமைச்சர் எ.வ.வேலுவுக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மற்றும் மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கும் அவர்களது மகிழ்ச்சி மற்றும் நன்றியை தெரிவித்தார்கள்.
த.இ.தாகூர்., கன்னியாகுமரி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil