Advertisment

கருணாநிதி குடும்பத்திற்கு விசுவாசம்… உதயநிதி மகன் வந்தாலும் ஆதரிப்போம் – கே.என்.நேரு

உதயநிதி அமைச்சரானால் பாலாறும் தேனாறும் ஓடுமா என்றுக் கேட்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பாலும், தேனும் ஓடியதா? உதயநிதி மகன் வந்தாலும் ஆதரிப்போம் – சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

author-image
WebDesk
New Update
கருணாநிதி குடும்பத்திற்கு விசுவாசம்… உதயநிதி மகன் வந்தாலும் ஆதரிப்போம் – கே.என்.நேரு

தி.மு.க.,வினர் கருணாநிதி குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பார்கள். உதயநிதி மட்டுமல்ல அவரது மகன் வந்தாலும் ஆதரவளிப்போம் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

Advertisment

தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

இதையும் படியுங்கள்: சென்னையில் அடுத்த பேருந்து நிலையம்: சேகர் பாபு ஆய்வு

அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, தி.மு.க.,வில் வாரிசு அரசியல் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார். இது வாரிசு அரசியல் அல்ல. கலைஞர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் தி.மு.க.,வினர் எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம். தி.மு.க.,வைக் கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுபடுவோம். அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் வேறு யாருக்கு இருப்போம். அதன் அடிப்படையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம். வாழ்க என்று சொல்வோம். நன்றியோடு இருப்பவர்கள் தி.மு.க.,வினர். எங்களை வாரிசு அரசியல் என்று சொல்லி மிரட்ட முடியாது.

உதயநிதி அமைச்சரானால் பாலாறும் தேனாறும் ஓடுமா என்றுக் கேட்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பாலும், தேனும் ஓடியதா? அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் இதுவரை எந்த கைது நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி புரிந்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தை ரூ. 5.75 லட்சம் கோடி கடனில் விட்டுச் சென்றார்கள். நெருக்கடியான சூழலில் தி.மு.க ஆட்சிக்கு வந்து இருக்கிறது. நிதிச் சுமையில் விட்டுச் சென்ற எடப்பாடி பழனிச்சாமி, தற்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிறார். விலைவாசியை உயர்த்தி வருவதாக குற்றம் சாட்டுகிறார்.

தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் தி.மு.க ஆட்சி அமைத்த ஒன்றரை ஆண்டுகளில் 203 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட திட்டங்களில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? 110 விதியின் கீழ் அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் வெறும் 143 திட்டங்கள் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Udhayanidhi Stalin K N Nehru Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment