Advertisment

இந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: அமைச்சர் ரகுபதி

அரசின் மசோதாக்கள் 2ஆவது முறையாக அனுப்பப்படும் போது அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பும் அதிகாரத்தை ஆளுநர் இழந்துவிடுகிறார்.

author-image
WebDesk
New Update
Minister Raghupathy, கொடநாடு வழக்கில் உயர் பதவியில் இருந்தாலும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது, கொடநாடு வழக்கு, அமைச்சர் ரகுபதி உறுதி, Minister Raghupathy says In Kodanadu case, criminals cannot escape even if they are in high positions, dmk, aiadmk,

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வு ஏற்கனவே அழுத்தம் திருத்தமாக தெரிவித்து உள்ளது

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (டிச.1) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மசோதாக்கள் 2ஆவது முறையாக அனுப்பப்படும் போது அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பும் அதிகாரத்தை ஆளுநர் இழந்துவிடுகிறார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வு ஏற்கனவே அழுத்தம் திருத்தமாக தெரிவித்து உள்ளது” என்றார்.

Advertisment

இதையும் படிங்க : அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிய மறுப்பு; கோப்புகளைத் திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவி

தொடர்ந்து, “இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் உள்துறை அமைச்சகம் மூலமாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இது மசோதாக்கள் மீது ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிற முயற்சி” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், “தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இது, மட்டுமே தீர்வாக அமையும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment