துணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் - மு.க ஸ்டாலின்

ஜெயலலிதா ஆட்சியை விட அதிக அளவு ஊழல் நடைபெறுகிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா ஆட்சியை விட அதிக அளவு ஊழல் நடைபெறுகிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates

முக ஸ்டாலின் குற்றச்சாட்டு : திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று தஞ்சை மாவட்டம் சென்றார் மு.க. ஸ்டாலின். இந்தியாவிலேயே பதவியில் இருக்கும் போது முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று அவர் எடப்பாடி பழனிச்சாமியை குற்றம் சாட்டிப் பேசினார்.

Advertisment

மேலும் முதலமைச்சர் மட்டுமல்லாது துணை முதலமைச்சர் வரை அனைவர் மீதும் சிபிஐ விசாரணை வரும் என்று கூறினார். நெடுஞ்சாலைத்துறை விவகாரத்தில் 3000 கோடி ரூபாய் வரை உறவினர்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைக்கேடு நடந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசிய ஸ்டாலின், மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விட அதிக அளவில் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்வின் போது முக ஸ்டாலின் முன்னிலையில் மற்றக் கட்சி உறுப்பினர்கள் பலர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் படிக்க : நெடுஞ்சாலைத் துறை விவகாரத்தில் முதல்வர் மீது சிபிஐ விசாரணை

Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: