வாட்ஸ்ஆப் மூலம் உறவினர்களிடம் பேச நளினி, முருகனை அனுமதிக்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வாட்ஸ்ஆப் மூலம் உறவினர்களிடம் பேச நளினி, முருகனை அனுமதிக்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

வாட்ஸ்ஆப் மூலம் உறவினர்களிடம் பேச முருகன், நளினி ஆகியோரை அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சிறைத்துறையும் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

தமிழகத்தில் இன்று புதிதாக 434 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ்

அந்த மனுவில், இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், இங்கிலாந்தில் உள்ள மூத்த சகோதரியிடமும் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தினமும் 10 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

மேலும் கடந்த வாரம் இயற்கை எய்திய தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததையும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சிறைத்துறை ஒரு  வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Nadu Government Nalini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: