Tamil Nadu news today live updates: இன்று (ஜூன்.11) தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள், லேட்டஸ்ட் செய்திகள், வானிலை அறிவிப்புகள், சினிமா அப்டேட்ஸ், விளையாட்டு தொடர்பான செய்திகள் என பல களங்களில் இருந்தும் உங்களுக்கான அப்டேட்ஸ்களை உடனுக்குடன் இந்த செய்தியில் வழங்குகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம்.
மேலும் படிக்க - Tamil Nadu news today live updates: ஜூன்.12ம் தேதிக்கான முக்கிய செய்திகள் தமிழில் உடனுக்குடன் அரிய இங்கே க்ளிக் செய்யவும்
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழ்நாடு முக்கிய செய்திகள்
மருத்துவப் படிப்பில் சேர இதுவரை ஆன்லைனில் 45 ஆயிரத்து 26 மாணவர்கள் பதிவு செய்திருப்பதாக மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
35 ஆயிரத்து 386 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் வரும் 20-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
எந்த கட்சியாக இருந்தாலும் அதற்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் சிறந்தது. அதிமுகவில் நிலவும் பிரச்னையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டி துவங்குவதற்கு முன்பே மழை விளையாட துவங்கிவிட்டது. இதன்காரணமாக, டாஸ் போடாதநிலையில், போட்டி கைவிடப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர்.
வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தல், நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். தான் நடித்து விரைவில் வெளிவர உள்ள சிந்துபாத் படம் தொடர்பான நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது, நடிகர் சங்கத்தில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது, அது கொஞ்சம் கொஞ்சமாக முடிந்தால் நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி * சினிமாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் உள்ளனர், அதனால் நல்லபடியாக தேர்தல் நடந்து முடிய வேண்டும். நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஆதரவு என இப்போது கூற முடியாது என விஜய் சேதுபதி கூறினார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு யுனெஸ்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படும் ஓப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 1 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். பள்ளி வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் அரைமணி நேரம் விளையாடும் வகையில் திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் டெல்லி நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி சந்திப்பு#MinisterThangamani | #MinisterVelumani | #AmitShah | #AIADMK pic.twitter.com/m5QlKLZAkH
— Thanthi TV (@ThanthiTV) 11 June 2019
மின்வாரிய சட்டவிரோத குடியிருப்பு ஒதுக்கீட்டை கண்டுபிடிக்க தனி குழு அமைக்கவும் உத்தரவு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மின் வாரியத்தில் குடியிருப்புகள் ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பராமரிக்கவும் 4 வாரத்தில் தனி இணையதளம் உருவாக்க மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 'ராஜராஜசோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் பறிக்கப்பட்டது' என ரஞ்சித் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விமல், ரமேஷ்கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சந்தா முறையாக செலுத்தாததால் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் ஐசரிகணேஷ் தலைமையிலான அணியில் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைக்கு புதிதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. வருகின்ற 17 ஆம் தேதி மக்களவை கூட உள்ளது. இந்நிலையில், மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய எம்.பிக்களுக்கு வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா, நடிகர் ஜெயராம் உள்ளிட்ட உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள், கிரேஸி மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதுபோல், இறுதி அஞ்சலி செலுத்திய இயக்குனர் சரண், 'கமல்ஹாசனின் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கு தலைப்பு வைத்ததே கிரேஸி மோகன் தான்' என்று தனது நிலைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தனது ட்விட்டரில், "காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது.இன்னும் அந்த இரவு விடியல.அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா அவன் வாழ்க்கை மாறிடிச்சு" என்று பேரறிவாளன் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயலால், தமிழகத்தின் பருவ மழைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும், வாயு புயலால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக மழை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu news today live updates: தென்கிழக்கு அரேபிக் கடலில் காற்றழுத்தாழ்வு உருவாகியுள்ளது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி 'வாயு' புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிரேஸி மோகனின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று நடக்கிறது. திரை நட்சத்திரங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிழவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்” என்றார். அவரின் இந்த பேச்சு சமூக தளங்களில் கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights