Advertisment

மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள்.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்துக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNGASA- 2020 online

TNGASA- 2020 online

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற வகுப்புக்களை ஒழுங்கபடுத்த என்ன விதிமுறைகளை கொண்டு வர உள்ளீர்கள்? என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்துக்கின்றன.

ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது பல ஆபாச இணையதள விளம்பரங்கள் அவர்களின் கவனத்தை சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர் சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற – கிராமப்புற மற்றும் ஏழை – பணக்கார மாணவர்கள் அரசுபள்ளி - தனியார் பள்ளி மாணவர்கள் இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களை சந்தித்துள்ளதாகவும், பல இடையூறுகள் உள்ளதாகவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டியுள்ள அவர், ஆபாச இணையதளங்களை மாணவ, மாணவியர் பார்ப்பதை தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்காமல் ஆன் லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் வினீத்கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோரஅ அடங்கிய அமர்வில் காணொளி காட்சி முலம் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் இது போன்ற ஆன்லைன் வகுப்புகளை நடத்த ஏதாவது விதிமுறைகள் உள்ளதா?ஏதாவது திட்டம் உள்ளதா? என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் மத்திய அமைச்சர்

இதற்கு பதில் பதில் அளித்த தமிழக அரசு வழக்கறிஞர் மாநில அரசு பிரத்யேக கல்வி சேனல் வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தற்போது கொரோனா காரணமாக அனைத்துமே ஆன்லைன் முறையில் உள்ளது என தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் தற்போதைய நிலையில் ஆன்லையன் மூலம் நடத்தபடும் வகுப்புகளுக்கு எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் ஆன் லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள்ளதா? அல்லது அதனை கொண்டுவர ஏதேனும் கருத்து உள்ளதா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 20 ஆம்தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment