அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்-ஐ விட எஸ்.பி வேலுமணி புத்திசாலி – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி

பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ் உடன் இருக்கிறேன் – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் பேட்டி

பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ் உடன் இருக்கிறேன் – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் பேட்டி

author-image
WebDesk
New Update
Puzhalendi met with former Karnataka Chief Minister Yeddyurappa

ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி

சொந்த தொகுதியில் நின்று தோல்வி கண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் அனாதை ஆகி விட்டதாகவும் அவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை என்றும் ஓ.பி.எஸ் அணியின்  கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி கூறியதாவது:

இதையும் படியுங்கள்: ஜி.கே வாசனுடன் அ.தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க போட்டி?

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி கண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட கோருவதாகவும், வாசனிடம் மீண்டும் அத்தொகுதியை ஒப்படைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி தப்பிவிட நினைக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

Advertisment
Advertisements

ஈரோட்டில் போட்டியிட தங்கள் தயாராக இருப்பதாகவும், ஓ.பி.எஸ் என்ன சொல்கிறார் என்பதற்காக காத்திருப்பதாகவும் கூறியதுடன் இரட்டை இலைக்கு சொந்தக்காரர் ஓ.பி.எஸ் மட்டுமே எனவும், கூட்டணி தொடர்பாக பா.ஜ.க கட்சியினர் ஓ.பி.எஸ் உடன் பேசி தான் முடிவு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

publive-image
கோவையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி

சொந்த தொகுதியில் நின்று தோல்வி கண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் அனாதை ஆகி விட்டதாகவும் அவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை எனவும் கூறிய புகழேந்தி, திரை மறைவில் அ.தி.மு.க.,வை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே தான் ஓ.பி.எஸ் உடன் இருக்கிறேன் என்றும் கூறினார்.

தற்போது அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிசாமியை விட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி புத்திசாலி எனவும் கள நிலவரம் தெரிந்தவர் எனவும் கூறிய புகழேந்தி, தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டதால் தற்போது அவருக்கு கட்சியில் எந்த பதவியும் இல்லை என்றும், அ.தி.மு.க.,விற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி உடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றது ஓ.பி.எஸ் ஆல் மட்டுமே, ரோஷம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் கையெழுத்திட்ட பதவியை ராஜினாமா செய்யட்டும் என்றும் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Admk Ops Eps

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: