Advertisment

வீட்டு வேலைப் பணியாளர்கள் பணிபுரிவதற்கான அனுமதி ரத்து - தமிழக அரசு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்நாடு கொரோனா செய்திகள், chennai coronavirus case, சென்னை கொரோனா வைரஸ், கிருஷ்ணகிரி, புதுகோட்டை மாவட்டம், pass for home servants, coronavirus latest news updates, daily corona bulletin, tamilnadu corona news , coronavirus, corona

தமிழ்நாடு கொரோனா செய்திகள், chennai coronavirus case, சென்னை கொரோனா வைரஸ், கிருஷ்ணகிரி, புதுகோட்டை மாவட்டம், pass for home servants, coronavirus latest news updates, daily corona bulletin, tamilnadu corona news , coronavirus, corona

வீட்டு வேலைப் பணியாளர்கள் பணிபுரிவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 5) வெளியிட்ட அறிவிப்பில், "மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவினை மே 4-ம் தேதி முதல் மே 17-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்புச் செய்ததன் அடிப்படையில் மே 3-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு கொரோனா எண்ணிக்கை 4000-ஐ கடந்தது: சென்னையில் இன்று மட்டும் 279

அந்த அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றுப் பணிபுரிய அனுமதிக்கப்பட்டது.

தற்போது, பொதுநலன் கருதி மே 3-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு பணிபுரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆகவே, வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் வரும் மே 17-ம் தேதி நள்ளிரவு ஊரடங்கு முடியும் வரை தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்குச் செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment