/tamil-ie/media/media_files/uploads/2023/07/Pollachi-chain-snatching.jpg)
பொள்ளாச்சி கடை வீதியில் சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்கள்; பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்
பொள்ளாச்சி கடைவீதியில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றனர்.
இதையும் படியுங்கள்: காவிரி பிரச்னை; தி.மு.க கூட்டணி தர்மம் பார்க்கக் கூடாது: கோவையில் சசிகலா பேட்டி
தீடீரென செயின் பறித்ததில் அந்தப் பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்பகுதி வியாபாரிகள் கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் சி.சி.டி.வி காட்சிகள் கொண்டு, மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி கடை வீதியில் பட்டபகலில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவை: மக்கள் நடமாட்டம் மிகுந்த கடை வீதியில் நகை பறிப்பு; பதற வைக்கும் சி.சி டி.வி காட்சிகள்#Kovaipic.twitter.com/MUwmPOygTW
— Indian Express Tamil (@IeTamil) July 24, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.