கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் சென்று சேரும்படி அட்வைஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
9, 2020#Thalaivar #Superstar #Rajinikanth's Statement On #CoronaVirus & How Important It Is To Take Precautionary Measures Also Appreciating The People Who Came Forward To Help Those In Need In The Time Of Crisis!@rajinikanth @SudhakarVM @rmmoffice pic.twitter.com/txNHQXj8nt
— RIAZ K AHMED (@RIAZtheboss)
#Thalaivar #Superstar #Rajinikanth's Statement On #CoronaVirus & How Important It Is To Take Precautionary Measures Also Appreciating The People Who Came Forward To Help Those In Need In The Time Of Crisis!@rajinikanth @SudhakarVM @rmmoffice pic.twitter.com/txNHQXj8nt
— RIAZ K AHMED (@RIAZtheboss) June 9, 2020
அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும்.
கொரோனாவை எதிர்த்து போராடும் திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தமிழிசை மருத்துவ உதவி
உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பது தான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள்
ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!!
என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.