Red alert To Tamil Nadu Due To Cyclone Fani at Bay of Bengal: ரெட் அலர்ட்... தீவிரமான புயல் உருவாகும்போது, மிரட்டலாக வருகிற வார்த்தை இது! ஓராண்டு இடைவெளியில் தமிழ்நாட்டுக்கு 2-வது ரெட் அலர்ட் இது. கடந்த ஆண்டு நவம்பரில் கஜா புயல் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தற்போது Cyclone Fani (ஃபனி புயல்) காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
Cyclone Fani-க்கு காரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை தென் மேற்கு வங்கக் கடலும், இந்து மாக்கடலும் சந்திக்கும் இடத்தில் உருவானது. பூமத்திய ரேகை அருகில் இது வலுப் பெற்று புயல் சின்னம் ஆகிறது. இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதி வழியாக பயணித்து, இந்தப் புயல் அடுத்த சில தினங்களில் வட தமிழகத்தை நெருங்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
Cyclone Fani at Bay of Bengal- சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Tamil Nadu Red Alert and Fani cyclone 2019: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
இதையொட்டி ஏப்ரல் 30, மே 1 ஆகிய இரு தினங்களுக்கு தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக சிவப்பு நிறம், ஆபத்தை உணர்த்தக்கூடியது. அந்த வகையில் ரெட் அலர்ட் என்பது அழிவைத் தரக்கூடிய வகையிலான புயலையொட்டி வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை.
மேலும் படிக்க - Cyclone Fani Live Updates: ஃபனி புயல் குறித்த சமீபத்திய அப்டேட்டுகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
எனினும் இது மிக ஆபத்தான புயலுக்கு முந்தைய எச்சரிக்கைதான். எனவே அதிகமாக பயப்பட ஒன்றுமில்லை. எனினும் வங்கக் கடலில் புயல் சின்னம் தோன்றியிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆழ்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசும் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்களை உஷார் படுத்தியிருக்கிறது. அடுத்த ஓரிரு தினங்களில் புயலின் நகர்வை வைத்து குடிசை வீடுகள், நீர் நிலைகளின் அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிகிறது.