Sathankulam custodial death, cbi investigation, cm palaniswamy, sathankulam death, சாத்தான்குளம், சிபிஐ விசாரணை, முதல்வர் பழனிசாமி, சாத்தான்குளம் சம்பவம்
CBI Investigation on Sathankulam Tragedy: கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Advertisment
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் துணை ஆய்வாளர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில், சேலத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாத்தாகுளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அவர், "சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தெரிவித்து, நீதிமன்ற அனுமதி பெற்றபிறகு சிபிஐ விசாரணை பரிந்துரை செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news