Sathankulam father son custodial death : சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் ஆகியோரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கு நேற்று (25.6.20) முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று வியாபாரிகள் கடையடைத்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் இருவரும் ஊரடங்கு காலத்தில் கடையடைப்பது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று போலீசார் தாக்கியதாகவும் பின்னர், அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தந்தை - மகன் இருவரையும் போலீசார் அடித்து சித்ரவதை செய்து கொன்றதாகவும் அவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு சாத்தான்குளத்தில் பொதுமக்கள் நேற்று காலை முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்ன நடந்தது?
வியாபாரிகள் மரணத்திற்கு நீதி கேட்டு அவர்களின் உறவினர்கள், மற்ற வியாபாரிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இருவரையும் அடித்து சித்ரவதை செய்து காவல்துறையினர் கொன்று விட்டதாக கூறிய அவர்கள், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.அதுவரை உயிரிழந்த ஜெயராஜ் - இம்மானுவேல் உடலை வாங்க போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை ஐகோாட்டு உத்தரவின்படி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமணையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இருந்த போதும், வியாபாரிகள் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் எதிர்ப்பு தெர்வித்தனர்.
இதையடுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.காலை 11 மணிக்கு ஜெயராஜின் மனைவி மற்றும் அவரது மூன்று மகள்களிடம் சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடந்தது. பின்னர் அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான சாத்தான்குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் திரண்டு நின்று, அவர்களது உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்களின் உடல்களுக்கு சண்முகநாதன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.
பெங்களூரு சிறையில் இருந்து ஆக.14ம் தேதி விடுதலை ஆகிறார் சசிகலா? - ஆச்சாரி ட்வீட்
கடையடைப்பு:
இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்று வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது. நேற்றும் (25.6.19) தமிழகத்தின் ஒருசில பகுதிகள் கடையடைத்து வியாபாரிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வியாபாரிகளின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் இன்றும் கடையடைப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil