எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : கொலையாளிகள் இருவரும் உடுப்பியில் கைது!

இவர்கள் இருவருக்கும் மும்பையில் இருந்து துப்பாக்கி வாங்கிக் கொடுத்த பாட்சாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் மும்பையில் இருந்து துப்பாக்கி வாங்கிக் கொடுத்த பாட்சாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வில்சன் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

Special Sub Inspector Wilson shot dead in revenge for Terror arrest

SI Wilson murder case 2 accused arrested in Uduppi : குமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல்துறை உதவியாளர் வில்சன் பணியில் இருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரள எல்லையில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisment

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்...

Advertisment
Advertisements

ஜனவரி 8ம் தேதி நடைபெற்ற இந்த கொலை வெறித் தாக்குதலின் பின்னால் இருக்கும் பிரச்சனை என்ன என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் தௌஃபிக் மற்றும் அப்துல் என இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் இருவரையும் தேடும் பணி கேரளா, தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா என்று நீண்டு கொண்டே இருந்த நிலையில் உடுப்பி ரயில் நிலையத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்ட இவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவர்கள் இருவருக்கும் மும்பையில் இருந்து துப்பாக்கி வாங்கிக் கொடுத்த பாட்சாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க : பயங்கரவாதிகள் கைதுக்கு பழிவாங்க கொல்லப்பட்டாரா எஸ்.ஐ வில்சன்  ?

Kanyakumari

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: