Advertisment

Tamil Nadu Assembly: ஆடி காற்றில் அம்மி கல்லோடு ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் - பூங்கோதை ஆலடி அருணா

TN Assembly: தமிழக சட்டமன்ற லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
poongothai aladi aruna, Tn assembly

பூங்கோதை ஆலடி அருணா

Tamil Nadu Assembly : தமிழக சட்டப்பேரவை கடந்த ஜூன் 28 முதல் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. உறுப்பினர்கள் தங்கள் பகுதியின் பிரச்னைகள் மற்றும் தேவைகள் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.

Advertisment

Tamil Nadu news today live updates : சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அதில் தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முற்பட்டது.  அதற்கு எதை எடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியதால், உணர்வுகளை கொச்சைப் படுத்துவதாகக் கூறி திமுக உறுப்பினர்களும், அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Live Blog

Tamil Nadu Assembly

இன்றைய தமிழக சட்டப் பேரவை விவாதங்கள் குறித்து உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.



























Highlights

    15:09 (IST)16 Jul 2019

    உடலுறுப்பு தானம்

    முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை போல அனைத்து உறுப்பினர்களும் உடல் உறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார். 

    14:17 (IST)16 Jul 2019

    பூங்கோதை ஆலடி அருணாவுக்கு அதிமுக அமைச்சர்கள் பதில்

    ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பேசினார். அதற்கு ஆடிக்காற்றும் அடிக்கப்போவதுமில்லை, அம்மிக்கல்லும் பறக்கப்போவதில்லை, ஜெயலலிதா ஆட்சியும் பறக்கப்போவதில்லை என செங்கோட்டையன் பதிலளித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்படி எல்லாம் பேசுவார்கள் என்று தெரிந்து தான், ஜெயலலிதா அன்றைக்கே அனைவருக்கும் மிக்ஸி கொடுத்துள்ளார், என்றைக்கும் ஜெயலலிதா ஆட்சி தான் என்றார் ஜெயக்குமார். 

    13:16 (IST)16 Jul 2019

    விஜய பாஸ்கர் பதில்

    ”நிதி ஆயோக், தவறான புள்ளி விவரங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது, இது குறித்து, நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்” என சுகாதாரத்துறையில் தமிழகம் பின்னடைவுக்கு சென்றது குறித்து, திமுக உறுப்பினர் பூங்கோதை கேட்ட கேள்விக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

    12:45 (IST)16 Jul 2019

    நெசவாளர்களுக்கு...

    நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். நெசவு தொழிலாளர்களுக்கு சேலை ஒன்றிற்கு கூலி ரூ 43.1 ஆகவும், வேட்டிக்கு ரூ 24 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    12:19 (IST)16 Jul 2019

    சபாநாயகர் தனபால் அறிவிப்பு

    பேரவையில் ராமசாமி படையாச்சியார் படத்தை, வரும் 19-ம் தேதி மாலை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அதோடு முதல்வர் தலைமையில், துணை முதல்வர் முன்னிலையில் நடக்கும் விழாவில் பங்கேற்க அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்..

    12:00 (IST)16 Jul 2019

    மு.க.ஸ்டாலின் Vs சி.வி.சண்முகம்

    ”விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசக் கூடாது” என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கூற, ”திட்டத்தை சட்ட ரீதியாக நிறுத்தவும், தடுக்கவும், சம்பந்தபட்டவர்கள் மீறும்போது, நடவடிக்கை எடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது, அப்படி இருக்கும்போது, எதற்காக போராட்டம் நடத்த வேண்டும்” என்றார் சி.வி.சண்முகம்

    11:50 (IST)16 Jul 2019

    அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது

    "தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது. ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த வடிவில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம், அரசியலுக்காக போராட்டம் நடத்தினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது" என அமைச்சர் சி.வி சண்முகம் கூறியுள்ளார். 

    11:45 (IST)16 Jul 2019

    மு.க.ஸ்டாலின் கோரிக்கை

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். அதோடு, இதே கூட்டத்தொடரில் முடிவெடுத்து அறிவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். 

    11:24 (IST)16 Jul 2019

    இன்றைய தமிழக செய்திகளை தெரிந்துக் கொள்ள...

    இன்றைய தமிழக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

    Tamil Nadu news today live updates : சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

    TN Assembly: நெல்லை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ 137 கோடியில் புதிதாக நீர்த்தேக்கம் கட்டப்படும் என்றும் ஏரி கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்படும் எனவும், கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் ரூ 495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார்.

    அதோடு திட்டப்பணிகள் வெளிப்படையாக நடக்கின்றன எனவும், தவறுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில அதிகாரிகளை சஸ்பெண்டும் செய்திருக்கிறோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்.

    Mk Stalin Dmk Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment