Tamil Nadu Assembly : தமிழக சட்டப்பேரவை கடந்த ஜூன் 28 முதல் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. உறுப்பினர்கள் தங்கள் பகுதியின் பிரச்னைகள் மற்றும் தேவைகள் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அதில் தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முற்பட்டது. அதற்கு எதை எடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியதால், உணர்வுகளை கொச்சைப் படுத்துவதாகக் கூறி திமுக உறுப்பினர்களும், அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
Live Blog
Tamil Nadu Assembly
இன்றைய தமிழக சட்டப் பேரவை விவாதங்கள் குறித்து உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பேசினார். அதற்கு ஆடிக்காற்றும் அடிக்கப்போவதுமில்லை, அம்மிக்கல்லும் பறக்கப்போவதில்லை, ஜெயலலிதா ஆட்சியும் பறக்கப்போவதில்லை என செங்கோட்டையன் பதிலளித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்படி எல்லாம் பேசுவார்கள் என்று தெரிந்து தான், ஜெயலலிதா அன்றைக்கே அனைவருக்கும் மிக்ஸி கொடுத்துள்ளார், என்றைக்கும் ஜெயலலிதா ஆட்சி தான் என்றார் ஜெயக்குமார்.
”நிதி ஆயோக், தவறான புள்ளி விவரங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது, இது குறித்து, நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்” என சுகாதாரத்துறையில் தமிழகம் பின்னடைவுக்கு சென்றது குறித்து, திமுக உறுப்பினர் பூங்கோதை கேட்ட கேள்விக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்
நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். நெசவு தொழிலாளர்களுக்கு சேலை ஒன்றிற்கு கூலி ரூ 43.1 ஆகவும், வேட்டிக்கு ரூ 24 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரவையில் ராமசாமி படையாச்சியார் படத்தை, வரும் 19-ம் தேதி மாலை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அதோடு முதல்வர் தலைமையில், துணை முதல்வர் முன்னிலையில் நடக்கும் விழாவில் பங்கேற்க அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்..
”விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசக் கூடாது” என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கூற, ”திட்டத்தை சட்ட ரீதியாக நிறுத்தவும், தடுக்கவும், சம்பந்தபட்டவர்கள் மீறும்போது, நடவடிக்கை எடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது, அப்படி இருக்கும்போது, எதற்காக போராட்டம் நடத்த வேண்டும்” என்றார் சி.வி.சண்முகம்
"தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது. ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த வடிவில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம், அரசியலுக்காக போராட்டம் நடத்தினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது" என அமைச்சர் சி.வி சண்முகம் கூறியுள்ளார்.
இன்றைய தமிழக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...
அதோடு திட்டப்பணிகள் வெளிப்படையாக நடக்கின்றன எனவும், தவறுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில அதிகாரிகளை சஸ்பெண்டும் செய்திருக்கிறோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights