Tamil Nadu assembly updates : 07/01/2020 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து நாம் இங்கே அறிந்து கொள்வோம். 6ம் தேதி துவங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டம் 9ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. 6ம் தேதி, கேரள அரசு போன்றே தமிழகத்திலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய திமுகவினர், பிறகு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நேற்று 2வது நாளாக மீண்டும் சட்டப்பேரவை துவங்கியது.
உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள்
07/01/2020 - சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
மீண்டும் சூடுபிடித்த சி.ஏ.ஏ விவகாரம்
கேரள மாநிலத்தில் கடந்த வாரம், பா.ஜ.க எம்.எல்.ஏ. ஓ ராஜகோபால் நீங்களாக அனைவரும், அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏவுக்கு எதிரான தீர்ப்பினை வரவேற்றனர். தமிழக அரசு இது போன்று தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறினார். நேற்று மீண்டும் சட்டப்பேரவையில் முக ஸ்டாலின், இந்த விவகாரத்தைப் பற்றி பேசிய போது, ஏற்கனவே பரிசீலினையில் இந்த தீர்மானம் இருப்பதால் இது குறித்து தற்போது விவாதிக்க வேண்டாம் என்றும், விதிமுறைகளை சரிபார்த்து சரியான முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் காத்திருக்க வேண்டும் என்றும் தனபால் அறிவித்தார்.
தமிழக தொழிற்சாலைகளில் 60% வேலைகள் தமிழர்களுக்கே
தமிழகத்தில் தொழில் துவங்கும் தொழிற்சாலைகளில் 60% வேலைகள் தமிழர்களுக்குத் தான் என்று ஒப்பந்தம் செய்திருப்பதாக அமைச்சர் எம்.சி. சம்பத் நேற்று சட்டப்பேரவையில் கூறினார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் இளைஞர்கள், வேலை வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வருவதாகவும், வேலையை ஏற்பாடு செய்வது தமிழக அரசின் கடமை என்றும் திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி கூறியது குறிப்பிடத்தக்கது.
Live Blog
Tamil Nadu assembly today live updates : தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் மற்றும் பல்வேறு சுவாரசியமான சம்பவங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட இறப்புகள் குறித்து திமுக உறுப்பினர் கிருஷ்ண்சாமி கேள்வி எழுப்பியதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆண்டு சுகாதாரத்துறையில் தமிழக அரசு மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து கூறினார். மேலும் பாராட்ட மனமில்லாத எதிர்கட்சி என்றும் கூறினார். அதற்கு துரைமுருகன், எதிர்கட்சியினரிடம் பாராட்டை எல்லாம் எதிர்பார்க்க கூடாது என்றார். விஜயபாஸ்கர் அதற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார். துரைமுருகனோ மலர் என்றால் மணக்கும். காகிதபூவாக இருந்தால் என்ன செய்வது என்று பதில் கூற அவை சிரிப்பலையில் மூழ்கியது.
சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சர் வேலுமணியுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதல்வர் 2014 முதல் 2019 வரை 2,96,266 நபர்களுக்கு, 909 கோடி ரூபாய் வரையில் சிகிச்சைக்கு கொடுக்கப்பட்டது என்றும், ஓய்வூதியதாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிக்க அரசு பரிசீலிக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights