Advertisment

Tamil Nadu Assembly News: NRCயை எதிர்ப்போம் – அமைச்சர் உதயகுமார்

Tamil nadu assembly live updates : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu assembly live today updates : சட்டசபை கூட்டத்தொடர்

Tamil Nadu assembly live today updates : சட்டசபை கூட்டத்தொடர்

Tamil Nadu Assembly Session : சட்டசபையில் உரை நிகழ்த்திய கவர்னர், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறினார். அத்துடன், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்குமான பொது வினியோக திட்டம், பிற மாநிலங்களும் தொடர்ந்து பின்பற்றுவதற்கான முன்மாதிரியாக அமைந்துள்ளது. முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட பொது வினியோக அமைப்பு நடைமுறைகளினால், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை தமிழ்நாடு அரசால் நடைமுறைப் படுத்த முடிகிறது.

Advertisment

தமிழகத்தில் பூமழை உள்ளிட்ட சுவாரசிய தகவல்களை படிக்க...

பல்வேறு தடைகள் வந்தபோதிலும், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதை இந்த அரசு உறுதி செய்தது. மீதமுள்ள 9 மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இந்த செயல்பாடு, மக்களாட்சியைப் பரவலாக்குவதில் இந்த அரசுக்கு உள்ள முனைப்பினை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார்.

Live Blog

Tamil nadu assembly live updates : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    19:18 (IST)07 Jan 2020

    நெல்லை கண்ணனை கைது செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை; சட்டரீதியாகவே நடவடிக்கை - முதல்வர்

    சட்டப்பேரவையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், நெல்லை கண்ணனை கைது செய்தது ஏன்? அவர் என்ன தவறு செய்தார் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை; சட்டரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த தலைவரையும் அப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

    13:28 (IST)07 Jan 2020

    திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தடை

    சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தடைவிதித்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

    13:26 (IST)07 Jan 2020

    NRCயை எதிர்ப்போம் – அமைச்சர் உதயகுமார்

    தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தினால் அதிமுக எதிர்க்கும். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

    13:07 (IST)07 Jan 2020

    மன்னிப்பு கேட்டார் திமுக எம்எல்ஏ அன்பழகன்

    உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியை ஒருமையில் பேசியது தொடர்பாக, திமுக எம்எல்ஏ அன்பழகனை வெளியேற்றுவது தொடர்பாக அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம்  தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அன்பழகன் மன்னிப்பு கேட்டார். 

    மறப்போம், மன்னிப்போம் என ஒ.பன்னீர்செல்வம் கூறியதால் வெளியேற்றத்தை கைவிட்டார் சபாநாயகர்

    12:38 (IST)07 Jan 2020

    சிஏஏ சட்டத்தை எதிர்க்கவில்லை ; திருத்தத்தையே எதிர்க்கிறோம் - திமுக

    குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை, அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களையே எதிர்ப்பதாக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    சிறுபான்மையினருக்கு ஆதரவாக எங்கள் கட்சி உள்ளது என்று அதிமுக கூறிவரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அளித்தது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    12:34 (IST)07 Jan 2020

    சட்டம் – ஒழுங்கில் தமிழகம் முதலிடம் – முதல்வர் பழனிசாமி

    நாட்டிலேயே சட்டம் ஒழுங்கில் தமிழகம் தான் முதன்மை மாநிலமாக உள்ளது என்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குறறச்சாட்டுக்கு திமுக எம்எல்ஏ அன்பழகன் ஆதாரங்களை அளிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதன்மை இடம் என்பதை நாங்கள் கூறவில்லை, மத்திய அரசே கூறியிருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    12:23 (IST)07 Jan 2020

    உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றது – பொள்ளாச்சி ஜெயராமன்

    உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றதற்கு எடப்பாடி, கெங்கவல்லியில் அதிமுக தோற்றதே சாட்சி என்று சட்டசபையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். சென்னையில், 2006ம் ஆண்டில் உருட்டுக்கட்டை தேர்தல் நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார்.

    12:05 (IST)07 Jan 2020

    ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது – அதிமுக கோரிக்கை

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார்.

    11:35 (IST)07 Jan 2020

    சட்டசபை மாற்றுத்தலைவர்கள் அறிவிப்பு

    சட்டசபை மாற்றுத்தலைவர்களாக ராஜன் செல்லப்பா, குமரகுரு, எஸ்.பி. சண்முகநாதன், நரசிம்மன், எஸ்.ரவினா குணசேகரன் உள்ளிட்டோர் செயல்படுவார்கள் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

    11:17 (IST)07 Jan 2020

    திமுக வெளிநடப்பு

    குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதத்திற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால், சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, இதுதொடர்பாக, ஜனவரி 2ம் தேதியே நாங்கள் சபாநாயகரிடம் மனு வழங்கியுள்ளோம். இதுவரை அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

    திமுக உடன் காங்கிரஸ், அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

    11:03 (IST)07 Jan 2020

    மறைமுக தேர்தல் நடத்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்

    மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது

    10:36 (IST)07 Jan 2020

    கேள்வி - பதில் நேரம் துவங்கியது

    சட்டசபை 15 நிமிட ஒத்திவைப்புக்கு பிறகு மீண்டும் துவங்கியுள்ள நிலையில் கேள்வி - பதில் நேரம் நடைபெற்று வருகிறது.

    10:22 (IST)07 Jan 2020

    சபை 15 நிமிடம் ஒத்திவைப்பு

    தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் உள்ளிட்ட 13 எம்எல்ஏக்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சபை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

    10:07 (IST)07 Jan 2020

    மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்

    மறைந்த எம்எல்ஏக்கள் நல்லப்பன், வடிவேலு உள்ளிட்ட 13 பேருக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    09:59 (IST)07 Jan 2020

    இன்றைய சபை நடவடிக்கைகள்

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது, அதன் பின்னர் அது தொடர்பான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Tamil Nadu Assembly Session Today News:  கவர்னர் உரைக்கு அரசியல் கட்சிகள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

    பாமக நிறுவனர் ராமதாஸ் : தமிழக சட்டப்பேரவையின் 2020-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் அளித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும்.

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ : தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் உரையின் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு தன்னைத்தானே பாராட்டிக்கொண்டு இருக்கிறது. ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்னும் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவோம் என்று அறிவித்திருப்பது, பொது வினியோக முறையைச் சீர்குலைத்துவிடும். நடப்பு ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 115 மெட்ரிக் டன் என்ற அளவை எட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், உணவு தானிய உற்பத்திக்கு அடித்தளமாக இருக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளை இந்த அரசு அலட்சியப்படுத்தி வருகிறது என்றார்.

    Tamil Nadu Tamilnadu Assembly
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment