5,000 விவசாய மின் இணைப்புகளை மாற்றியமைக்க ஒப்புதல்; தமிழக அரசு அரசாணை

சூரிய சக்தியில் இயங்கும் வகையில் 5,000 விவசாய மின் இணைப்புகளை மாற்றியமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல்; அரசாணை வெளியீடு

சூரிய சக்தியில் இயங்கும் வகையில் 5,000 விவசாய மின் இணைப்புகளை மாற்றியமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல்; அரசாணை வெளியீடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Farmer

Farmer

5,000 விவசாய மின் இணைப்புகளை சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மாற்றியமைக்க ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5,000 விவசாய மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் விவசாயப் பயன்பாடு போக மின்சாரத்தை விவசாயிகள் அரசுக்கு விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பராமரிப்பு பணி: சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த மின் இணைப்புகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா 30% நிதி அளிக்கும், எஞ்சிய 40% நிதி மின்வாரியம் உதவியுடன் வங்கி கடன் மூலம் விவசாயிகளுக்கு தரப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

சிறிய அளவில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் விவசாயப் பணிக்கு பயன்படுத்தப்படும். மீதமுள்ள மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் விலைக்கு பெற்றுக்கொள்ளும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Agriculture

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: