/tamil-ie/media/media_files/uploads/2023/03/MK-Stalin-Nitish.jpg)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் (கோப்பு படம்)
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பீகார் தொழிலாளர்கள் தாக்குதலுக்கு ஆளானதாக வெளியான செய்திகள் குறித்து கவலை தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு, மற்ற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழக அரசு பாதுகாக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து வதந்திகளை பரப்புவது இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு எதிரானது. மலிவு அரசியல் செய்யும் நோக்கில் வெளியிடப்படும் சமூக ஊடகப் பதிவுகள் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: “வடமாநிலத்தவர் மீதான தாக்குதல் வீடியோக்கள் போலியானவை” : டி.ஜி.பி.சைலேந்திர பாபு டுவீட்
இது தொடர்பாக பீகார் முதல்வரிடமும் ஸ்டாலின் போனில் பேசினார். “அனைத்து தொழிலாளர்களும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எங்கள் தொழிலாளர்கள் என்று நான் அவரிடம் உறுதியளித்தேன். எனவே, இந்த பிரச்சினைகள் எதுவும் அவர்களை பாதிக்காது என்று நான் உறுதியளித்தேன், ”என்று ஸ்டாலின் கூறினார்.
“வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 4, 2023
1/2 pic.twitter.com/YyT1beuvWp
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம் என்றும், அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அரசாங்கத்தின் உதவி எண்ணை அழைக்கவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். புலம்பெயர்ந்த நமது சகோதரர்களைப் பாதுகாக்க தமிழக அரசும் மக்களும் துணை நிற்பார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.
வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்புபவர்கள், போலியான வீடியோக்கள் மற்றும் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மாநிலத்தில் அச்சத்தையும் பீதியையும் பரப்ப முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ”தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை சீர்குலைக்கவும், மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கவும் சிலர் முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுகளை ஆராய பீகாரில் இருந்து நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் குழு சனிக்கிழமை தமிழகம் வந்துள்ளதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களாக நடந்த ஆலோசனைக்குப் பிறகு குழுவை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
“நேற்று முன்தினம் செய்தித்தாள்களில் இந்த விஷயத்தைப் பற்றி நான் முதலில் படித்தேன், இங்குள்ள அதிகாரிகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் சக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். நேற்று அந்த மாநிலத்துக்கு ஒரு குழுவை அனுப்பி முதல் தகவல் பெறுவது நல்லது என்றார்கள். அதன்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,'' என்று நிதிஷ்குமார் கூறினார்.
வியாழனன்று, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சி.சைலேந்திர பாபு, மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களைக் காட்டும் சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் "தவறானவை" மற்றும் "போலியானவை" என்று தெளிவுபடுத்தினார். தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசி பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.,க்கு நிதிஷ் குமார் உத்தரவிட்டதையடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.
விரைவில், பீகாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் இந்த வீடியோக்கள் போலியானவை என்று மீண்டும் வலியுறுத்தினார், “தமிழகத்தில் பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறிவைக்கப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் வதந்திகளை பரப்புகிறது என்று தமிழ்நாடு டி.ஜி.பி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீகார் மக்களுக்கு இனி தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்று கூறி வன்முறையின் பழைய வீடியோ உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டு பீதியை உருவாக்குகிறது,” என்று கூறினார்.
இதற்கிடையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வைத் தாக்கி, "நிலைமையை சரிசெய்ய வேண்டும்" என்று அரசைக் கேட்டுக் கொண்டார். அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழ் மக்களாகிய நாங்கள், "உலகம் ஒன்று" என்ற கருத்தை நம்புகிறோம், எங்கள் வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் கேவலமான வெறுப்பையும் ஆதரிக்கவில்லை. (1/5)”
It is disheartening to see fake news spread in social media about attacks on Migrant workers in Tamil Nadu.
— K.Annamalai (@annamalai_k) March 4, 2023
We, the Tamil people, believe in the concept of “The World is One” and do not endorse the separatism & vile hatred against our North Indian friends. (1/5)
"தி.மு.க எப்போதும் எடுக்கும் பிளவு அவர்களை மீண்டும் கடிக்க வருகிறது, இப்போது இந்த நிலைமையை சரிசெய்வது அவர்களின் பொறுப்பு, மேலும் அவர்களின் செயலிழந்த பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இது ஒரு வாய்ப்பாகும்," என்று அண்ணாமலை கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.