Tamil Nadu news today updates: 'சென்னை விமான நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடும் வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது' - விமான நிலைய இயக்குனர்

News in Tamil: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்!

News in Tamil: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates: மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களை, தமிழக தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். அத்திவரதரை தரிசிக்க வந்த வாலிபருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு உதவிய பெண் காவலர் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சென்னை மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் நேற்றிரவு நல்ல மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisment

விதிகளை மீறி தகவல்களை பகிர்ந்ததற்காக முன்னணி சமூக ஊடகமான ஃபேஸ்புக்கிற்கு ரூ. 3 லட்சம் கோடி அபராதத்தை, அமெரிக்க வர்த்தக ஆணையம் விதித்துள்ளது.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of Politics, Sports, Cinema, weather, traffic, train services and airlines

இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்!














Highlights

    Advertisment
    Advertisements

    21:03 (IST)13 Jul 2019

    நாளை முதல் கட்டணம் கிடையாது

    சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் பயணிகளை இறக்கிவிடும் வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது என விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    19:51 (IST)13 Jul 2019

    சிமோனா ஹாலெப் சாம்பியன்

    விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸை 6-2, 6-2 நேர் செட்களில் தோற்கடித்தார். ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    19:21 (IST)13 Jul 2019

    தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி - வெங்கைய நாயுடு

    தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி. தாய்மொழியை அனைவரும் மறக்காது இருக்க வேண்டும். எந்த மொழியையும் திணிக்க கூடாது, எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது என துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

    18:38 (IST)13 Jul 2019

    கி.வீரமணிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை

    சென்னை அப்போலோ மருத்துவமனையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்படுகிறது; 2 வார ஓய்வுக்கு பின்னர் வழக்கமான பணிகளை தொடர மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக  திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

    18:08 (IST)13 Jul 2019

    இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் - கே.எஸ்.அழகிரி கண்டனம்

    தபால் துறை தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். அஞ்சல்துறை தேர்வை மாநில மொழிகளான தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    17:29 (IST)13 Jul 2019

    அமீர் வேட்புமனு நிராகரிப்புக்கு சங்கம் பொறுப்பல்ல - பேரரசு

    இயக்குனர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அதிகாரியை குறை சொல்வது தவறு என்றும் இயக்குனர் பேரரசு தெரிவித்தார். இயக்குனர் சங்க தேர்தலில் பொருளாளராக போட்டியின்றி தேர்வான இயக்குனர் பேரரசுவுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பேரரசு, தலைவர் பதவியை பொறுத்தவரை ஆர்.கே. செல்வமணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறினார். மேலும் அமீர் அணி விலகியதற்க்கு தேர்தல் அதிகாரியை குறை சொல்வது தவறு என்றும் தெரிவித்தார்.

    16:43 (IST)13 Jul 2019

    வருமான வரித்துறையினர் சோதனை!

    வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுவசூரில் ஏழுமலை என்பவரது வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மக்களவை தொகுதியில் ஆக.5ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் வருமானவரித்துறையினர் திடீரென்று  சோதனையில் ஈடுப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    16:03 (IST)13 Jul 2019

    தாஜூதீன், இஸ்மாயிலுக்கு சம்மன்!

    சென்னை மண்ணடியில் என்ஐஏ சோதனையை தொடர்ந்து தாஜூதீன், இஸ்மாயில் ஆகியோருக்கு கிண்டியில் உள்ள அலுவலகத்தில் இன்று மாலை ஆஜராக அதிகாரிகள்  சம்மன் கொடுத்துள்ளனர்.  மண்ணடியில் வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    15:16 (IST)13 Jul 2019

    புதிய கல்விக் கொள்கை!

    புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம்  என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு கருத்துகளை அனுப்பலாம் என்ற இணையதளத்தில் கருத்துகளை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    15:03 (IST)13 Jul 2019

    மு. க ஸ்டாலின் ஆய்வு!

    தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனது சொந்த தொகுதி கொளத்தூரில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி உபகரணங்கள், உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மடிக்கணினி உள்ளிட்டவைகளை வழங்கினார். 

    14:45 (IST)13 Jul 2019

    தனித் தேர்வுக் கொள்கை!

    போக்குவரத்து ஊழியர்கள் நியமனத்துக்கு 3 மாதங்களில் தனித் தேர்வுக் கொள்கை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  பிற்பித்துள்ளது. பயிற்சிப் பெற்றும் பணி வழங்கவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம்  இந்த உத்தரவை பிற்பித்தது. 

    14:44 (IST)13 Jul 2019

    நிர்வாகம் பொறுப்பல்ல - பேரரசு

    இயக்குனர் சங்க தேர்தலில் அமீர், ஜனநாதன் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல, அதிகாரியை குறை சொல்வது தவறு என பேரரசு பேட்டி 

    14:06 (IST)13 Jul 2019

    சுற்றறிக்கையை திரும்பப் பெறுக - டிடிவி ட்வீட்

    14:05 (IST)13 Jul 2019

    வேலை வாய்ப்பிற்கு முயற்சிப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி - டிடிவி

    14:03 (IST)13 Jul 2019

    மத்திய அரசின் செயல் கண்டனத்துக்குரியது - டிடிவி.தினகரன்

    13:22 (IST)13 Jul 2019

    நடிகர் சூர்யா பேச்சு

    60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம், 10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகளை மூடுவது சரியல்ல என அகரம் அறக்கட்டளையின் 40-ம் ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேச்சு. 

    13:18 (IST)13 Jul 2019

    Tamil News: வைகோ கண்டனம்

    ஒரே மொழி நிலையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைந்திருப்பது ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் செயல், அஞ்சல்துறைத் தேர்வுகளை தமிழில் நடத்தவேண்டும் என மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு வைகோ கண்டனம்..

    13:12 (IST)13 Jul 2019

    என்ஐஏ சோதனை

    சென்னையை தொடர்ந்து, நாகையில் சிக்கல், மஞ்சக்கொல்லை பகுதியில் அசன் அலி, ஹாரிஸ் முகமது வீடுகளில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறதா என என்ஐஏ சோதனை செய்து வருகிறது.

    12:22 (IST)13 Jul 2019

    மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

    தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் நடத்தப்படும் என நேற்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசின் இந்த சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    11:46 (IST)13 Jul 2019

    ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி - பள்ளிக் கல்வித்துறை

    11 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக் கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்க அலுவலர்கள், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    11:28 (IST)13 Jul 2019

    இயக்குநர் சங்க பொதுச் செயலாளர் - பொருளாளர் போட்டியின்றி தேர்வு

    பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு, இயக்குனர் சங்க பொது செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார் மற்றும் பொருளாளர் பதவிக்கு பேரரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்..

    11:22 (IST)13 Jul 2019

    லோக் அதாலத் தொடக்கம்

    தமிழகத்தில் லோக் அதாலத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளில் 2.32 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை, கீழமை நீதிமன்றங்களில் அந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. 

    11:06 (IST)13 Jul 2019

    சென்னை உட்பட 4 இடங்களில் சோதனை

    சென்னை உட்பட தமிழகத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். சென்னை மண்ணடியில் வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பின் அலுவலகம், புரசைவாக்கத்தில் உள்ள இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் தலைவரான சையது முகமது புகாரியின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

    10:55 (IST)13 Jul 2019

    அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

    திருவாரூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, பூண்டி கலைவாணன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

    10:36 (IST)13 Jul 2019

    காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    கர்நாடகாவில் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி தமிழகத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. பரமக்குடியில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

    10:18 (IST)13 Jul 2019

    Tamil News: ரவிக்குமார் எம்.பி கண்டனம்

    அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழில் தேர்வு எழுதும் வசதியை மாற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி என ரவிக்குமார் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். 

    10:10 (IST)13 Jul 2019

    வைகோ மேல்முறையீடு விபரம்

    தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனை முழுமையாக தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ஓராண்டு தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு!

    09:51 (IST)13 Jul 2019

    இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதியில் தரிசனம்

    ஜூலை 15ல் விண்ணில் ஏவப்படும் சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும் எனவும், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022க்குள் நிறைவேற்றப்பட உள்ளது எனவும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த பின் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்தார். 

    09:37 (IST)13 Jul 2019

    பணியாளர்கள் போராட்டம்

    சேலம் உலக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து குடும்பத்துடன் பணியாளர்கள் பேரணி  நடத்தினார்கள். உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தல். 

    09:33 (IST)13 Jul 2019

    Tamil news: வைகோ மேல்முறையீடு

    தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார். அவரது இந்த மேல்முறையீடு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    Tamil Nadu news today updates: கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக, ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப் பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதை விசாரித்த உயர்நீதி மன்றம் நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மிதமான இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும், என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Tamil Nadu Dmk Aiadmk Vaiko

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: