Tamil Nadu news today updates : விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞருக்கு நன்றி கூறியுள்ளது நாசா. ஜூலை மாதம் இஸ்ரோவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் 2-ன் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. நாசாவின் செயற்கைக்கோள்கள் எடுத்து அனுப்பிய தொடர் புகைப்படங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார் மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன். சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பணியாற்றும் இவர் அனுப்பிய மின்னஞ்சல் தகவல்கள் உதவியுடன் நாசா லேண்டர் விக்ரமின் பாகங்களை கண்டறிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாசா தன்னுடைய அதிகாரப்பூர்வ பதிர்வில் அந்த நபருக்கு நன்றி கூறியுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆனால் வட இந்தியாவில் குளிர் காலம் துவங்கிவிட்டது. இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மைனஸ் டிகிரியில் வெப்பம் நிலவி வருகிறது. லடாக் பகுதியில் -14 டிகிரியில் வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
Live Blog
Tamil Nadu news today updates, Chennai rains, TN politics, local body elections : தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தென்காசி: குற்றாலத்தில் பொதுப்பணித்துறை கேரள பேலஸ் வளாகத்தில் சிறுத்தை புகுந்ததாக காவலாளி புகார்
காவலாளி அளித்த புகாரை அடுத்து வனத்துறையினர் நேரில் சோதனை; கேரள பேலஸ் வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுரை
2ஆம் நிலை காவலர் உடற்தகுதித் தேர்வில் திருநங்கைகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், 2ஆம் நிலை காவலர் உடற்தகுதித் தேர்வில் 4 திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் உத்தரவை நிறைவேற்றாவிடில் ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைக்கும் தடைவிதிக்க நேரிடும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம்-கோவை இடையே ஜனவரி 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும்.
தாம்பரம்-நெல்லை இடையே டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6.45க்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும்.
தாம்பரம்-நெல்லை இடையே ஜனவரி 10ஆம் தேதி இரவு 7.15க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வீடு, அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரலட்சுமி நடத்தி வரும் நிறுவனத்திற்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளதில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளதில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.
மகாராஷ்டிரா பீமா கோரேகான் வன்முறை வழக்கில் சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களை திரும்பப் பெறக் கோரி மூத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் தனஞ்சய் முண்டே (கோப்பு படம்) முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சுவர் இடிந்து விழுந்ததில் 4 வீடுகள் இடிந்தது. இதில் தலித்துகள் 17 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கு காரணமான தனியார் சுவர் தீண்டாமை சுவர் என்று கூறப்படுவதால், மதுரை மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன், மேட்டுப்பாளையத்தில், சுவர் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணையை கோரி மனு அளித்துள்ளார்.
#கோயம்புத்தூர் மாவட்டம் #மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நடூர் கிராமத்தில் "தீண்டாமை சுவர்" இடிந்து விழுந்ததில் 17 தலித் மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்துயர சம்பவத்திற்கு நீதி கேட்டு நாகை திருவள்ளுவன் உள்பட செயற்பாட்டாளர்களும் மற்றும் உற்வினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.#cpim pic.twitter.com/uwXVDNqyra
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 3, 2019
தேமுதிக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசு மற்றும் அமைச்சர்களை விமர்சித்து 2013 - 2014 ஆண்டுகளில் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்குகள் தொடரப்பட்டன. 2012 -2016 வரை தமிழக அரசு சார்பில் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றுடன் பிற வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
விஜயகாந்த் மீதான இந்த வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் மற்ற 3 வழக்குகளை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
திமுகவைச் சேர்ந்த முன்னாள அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான இந்தி மொழி பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜான் நேற்று துவங்கி வைத்து அதற்காக ரூ.6 லட்சம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அதோடு, தமிழில் உயர்கல்வி பயிலும் மாணவர்கல் இந்தி மொழியைக் கற்றுக்கொண்டால் வேலை வாய்ப்பு உருவாகும் என்ற பழைய புளித்துப்போன கதையை மீண்டும் திருவாய் மலர்ந்தருளி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தைப் பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். அந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.
சென்னை ஐஐடி-யில் நடந்த 14 மாணவர்களின் தற்கொலை தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
இது தொடர்பான பொதுநல வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாத்திமாவின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், முழுமையான விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மாணவர்களின் தற்கொலைகள் ஐ.ஐ.டி வளாகங்களில் மட்டும் தான் நடைபெறுகிறதா என சந்தேகம் எழுப்பிய நீதிபதிகள், பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை ஏன் சிபிசிஐடி-க்கு மாற்ற கூடாது என அரசிடம் கேள்வி எழுப்பினர்.
பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவினர் முழுமையாக விசாரித்து முடிக்காத நிலையில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோர முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். யூகங்களின் அடிப்படையில், வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐ-க்கு மாற்ற முடியாது எனவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
தமிழகத்தில் அமையவுள்ள 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் அமைக்கப்படுகிறது.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் பணிக்காலம் முடிந்த நிலையில் காவல்துறையின் நிர்வாக ஐ.ஜி.யாக இருந்த அன்பு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.
கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடுகோரி போராடிய 24 பேரை மதுக்கரை நீதிமன்ற நீதிபதி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். இது ஒரு விபத்தென்றாலும், இதில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின், அரசும், காவல்துறையும் நேர்மையுடன் அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய இயலாது. வரும் காலங்களில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து, பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 17 நபர்கள் பலியாகினர். இந்த சுவரை கட்டி எழுப்பிய உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில் நடூர் பங்களா உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.
மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து வழக்கு பதவு செய்யப்பட்டது. சட்டப்பூர்வமான காரணங்களைக் கூறி கூடுதல் மனுதாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அந்த வழக்கை விசாரிக்க சி.பி.ஐ தரப்பு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கை ஏன் சி.பி.சி.ஐ.டி விசாரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நிலவின் தரையில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய மதுரையை சேர்ந்த பொறியாளருக்கு வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார் டிடிவி தினகரன்
சந்திராயன் 2 விண்கலத்துடன் அனுப்பப்பட்டு, கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளரான மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 3, 2019
17 பேரின் உயிரிழப்பு கூட ஆட்சியாளர்களின் கல் மனதை கரைக்கவில்லை. போராடியவர்கள் மீது தடியடி நடத்தி அராஜகம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். மேட்டுப்பாளையத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வு சம்பவம் என்றோ, விபத்து என்றோ கடந்து போய்விட இயலாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நாளை இந்திய கடற்படை தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறை முகத்தில் இந்திய கடற்படை வீரர்கள் சாகச நிகழ்ச்சிகள் நடத்தினர். ஹெலிகாப்ட்டரில் இருந்து கயிறு கட்டி வீரர்களை இறக்குவது, மீட்புப் பணியில் எப்படி ஈடுபடுவார்கள் என்பது குறித்தும் தங்களின் சாகச நிகழ்ச்சியில் சாதனைகள் செய்தனர்.
பாஜக ஆட்சியில் தான் செல்போன் கட்டணங்கள் குறைவு என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் 1ஜிபி டேட்டாவை பெர ரூ. 269 செலவிட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் ஒரு ஜிபி டேட்டா 11 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும் அறிவித்தார்.
கோவையின் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் மற்றும் அதனை சுற்றியிருக்கும் மலைப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இன்று காலையில் இருந்து கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
1ம் தேதி அன்று திமுக பிரமுகர் ஒருவர் இல்ல திருமணத்திற்கு சென்ற பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார், திமுக தலைவர் முக ஸ்டாலினின் செயல்பாடுகளை போற்றும் விதமாக பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்தார். இது பாஜக அரசியல் வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights