/tamil-ie/media/media_files/uploads/2018/12/rajinikanth-new-tv-channel-2.jpg)
tamil nadu news today
Tamil Nadu news today updates : திருப்பத்தூர் ராமகிருஷ்ண மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 117வது நாள் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க கமலஹாசன் வந்தபோது அவருக்கு எதிராக விஜய பாரதம் மக்கள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். ‘கோட்சேவை தவறாக பேசிய கமலஹாசனே மன்னிப்பு கேள், திருப்பத்தூர் விட்டு வெளியேறு’ என விஜய பாரதம் மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் சக்தி ஜி தலைமையில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இன்றைய நிகழ்வுகள் தொடர்பான தொகுப்புகள் வருமாறு:
15ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது இஸ்ரோ. ஆனால் ராக்கெட்டின் க்ரியோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திட்டம் இடைக்காலமாக கைவிடப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நாளை (22ம் தேதி) மதியம் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட இருப்பதாக அறிவித்தது இஸ்ரோ ! அதற்கான ஒத்திகை நிகழ்வு நேற்றிரவு நடத்திய இஸ்ரோ பிரச்சனைகள் ஏதும் இல்லை என்று உறுதி அளித்து ட்வீட் செய்துள்ளது.
Launch rehearsal of #GSLVMkIII-M1 / #Chandrayaan2 mission completed, performance normal#ISRO
— ISRO (@isro) 20 July 2019
ISRO Chandrayaan 2 Launch
நாளை மதியம் 02:43 மணிக்கு, சந்திரயான் 2 மீண்டும் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதனை நேரில் காண்பதற்கான டிக்கெட்கள் 18ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோளை விண்ணில் எடுத்துச் செல்கிறது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட். சரியாக விண்ணில் ஏவப்பட்டால் சந்திரனில் தடம் பதிக்கும் நான்காவது நாடு இந்தியாவாக இருக்கும். சந்திரனின் தென் துருவத்தில் ஆராய்ச்சி நடத்தும் முதல் நாடு இந்தியா என்ற பெருமையையும் உறுதி செய்யும் இந்த சந்திரயான் 2. மேலும் படிக்க : சந்திரயான் 2 : நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 முக்கியம்சங்கள் என்னென்ன?
Tamil Nadu weather today
இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று தஞ்சை, திருவாரூர், தேனி, மற்றும் நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மேலும் படிக்க : பல்வேறு இடங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services, Chandrayaan - 2 - தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
"அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் அனைத்தும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள முக்கியமான காலகட்டத்தில் பொதுச்செயலாளராகியிருப்பது வரவேற்கத்தக்கது" என்று ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
அமமுகவினரோடு தங்க தமிழ் செல்வன் திமுகவில் இணையும் நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தாய் மொழியாம் தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்து விட கூடாது. அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி தான் முதல்வராக வேண்டுமென முன்மொழிந்தவர் எம்ஜிஆர். எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் எனும் பட்டத்தை வழங்கியவர் கருணாநிதி. அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினருக்கு மதிப்பு இல்லை" என்று தெரிவித்தார்.
நவக்கிரஹ ஸ்தலங்களில் ஒன்றான சூரியனார் கோயிலில், ஆடி மாத மகா அபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, உஷா தேவி - சாயா தேவி உடனாய சிவசூரியப் பெருமானுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு மகா அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இயக்குனர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றிப் பெற்றிருக்கிறார். இயக்குநர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா விலகிய நிலையில் தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில், திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று ஆர்.கே.செல்வமணி வெற்றிப் பெற்றிருக்கிறார்.
திருப்பத்தூர் ராமகிருஷ்ண மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 117வது நாள் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க கமலஹாசன் வந்தபோது அவருக்கு எதிராக விஜய பாரதம் மக்கள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
‘கமலஹாசனே மன்னிப்பு கேள், திருப்பத்தூர் விட்டு வெளியேறு’ என விஜய பாரதம் மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் சக்தி ஜி தலைமையில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா விலகிய நிலையில் தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் ஆகியோர் இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, வேல்முருகன் போட்டியிட்டனர்.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. பதிவான வாக்குகள் மாலை 5 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேற்கு இந்திய தீவு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. 3 வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தினேஷ் கார்த்திக் ஓரம் கட்டப்பட்டுவிட, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் டி 20 அணியிலும், மற்றொரு தமிழக வீரர் ரவிசந்திரன் அஷ்வின் டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். முழுத் தகவல்களுக்கு ‘க்ளிக்’ செய்யவும்.
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசிய அதிரடி கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுக் குறித்து பேசிய அவர், “ தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய சூர்யாவுக்கு இருந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாது எனில் படத்தில் புரட்சிகரமான கருத்து பேசுவது ஏற்புடையதல்ல” எனவும் சங்கரின் கருத்திற்கு பதில் கருத்தும் கூறினார்.
கோலிவுட்டில் மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கு விஷயம் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து தனது கருத்தை பதிவு செய்தது தான். சூர்யாவின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்களும், எதிர்மறை விமர்சங்களும் வந்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இன்று நடைபெறும் இயக்குனர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த இயக்குனர் சங்கரின் சூர்யாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பட்டது,. இதற்கு பதில் கூறிய அவர், “சூர்யா பேசியது குறித்து எனக்கு ஏதும் தெரியாது” என பதிலளித்தார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதை வைபவத்தை காண நாளுக்கு நாள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. இடம் பற்றாக்குறை கூட்ட நெரிசல் பாதுகாப்பு கருதி பலரும் அத்தி வரதரை இடம் மாற்றினால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பக்தர்கள் வசதிக்காக அத்திவரதரை இடம் மாற்றுவது பற்றி கோயில் அர்ச்சகர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே நேற்றைய தினம் இதுக் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப் பூர்வ அறிவிப்பிறாக தொண்டர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கட்சிதலைவர்கள் ஒரு சேர இணைந்து ராஜாவை தேர்வு செய்துள்ளனர். இதுவரை பொதுச்செயலாளராக இருந்த எஸ்.சுதாகர்ரெட்டி உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்த நிலையில் டெல்லியில் நடந்த கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
டெல்லியின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் மரணம் அடைந்தார். அவரின் உடல் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, சண்முகசுந்தரம் மற்றும் மதிமுக சார்பில் எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ரூ.2 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 11 திட்டப்பணிகளை சேலம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் . முதல்வர் பங்கேற்றுள்ள இந்த விழாவில் சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் பங்கேற்றிருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.
சந்திரயான்-2 நாளை மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்குகிறது. தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும், இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் இயக்குநர் சங்க தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் நடன இயக்குநர்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றது. இயக்குநர் சங்க தேர்தல்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைப்பது இதுவே முதல் முறை என்றும், தேர்வு பெற இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் இயக்குநர் பாரதிராஜா பேட்டி
அத்திவரதர் கோவிலில் நடைபெற்று வரும் விழாவினை காண பக்த கோடிகள் பெரும் திரளாக படையெடுத்து வருகின்றனர். நெரிசலை குறைக்க கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், கூடுதலலாக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் டிஜிபி திரிபாதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு.
தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா எழுப்பிய கேள்விகள் ஆளும் கட்சியினர் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. சூர்யாவின் கருத்திற்கு பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் மற்றும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் ”சுதந்திர நாட்டில் இருக்கிறோம், ஆனால் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் இந்த மாதிரியான பிரச்சனைகள் பலருக்கும் நடைபெறுகிறது. தற்போது சூர்யாவிற்கும் இது நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் வருகை பெற்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குடும்பத்துடன் காஞ்சி சென்றுள்ளார்.
வருகின்ற 31ம் தேதிக்குள் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டும் அனைவரும் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்திருக்க வேண்டும். காலம் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால், அவர்களின் ஊதியத்திற்கு ஏற்ப 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், வருமானவரி தாக்கல் செய்யும் வரை, செலுத்த வேண்டிய வரிக்கு வட்டியும் கட்ட வேண்டும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. மேலும் குறித்த நேரத்தில் வருமானவரி தாக்கல் செய்யவில்லை என்றால் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
48 நாட்கள் நடைபெற்று இருக்கும் காஞ்சி அத்திவரதர் தரிசனத்தின் 21வது நாள் இன்று. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சிரமமின்றி கடவுளை தரிசிக்க குடிநீர், கழிப்பிட வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முதல்வர் உத்தரவு.
மாட்டிறைச்சி சூப் குடித்ததை தன்னுடைய முகநூலில் பதிவு செய்த இளைஞரை சிலர் தாக்கினர். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நாகையை சேர்ந்த முகமது பைசான். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் மதகலவரத்தை தூண்டுதல் போன்ற பிரிவின் கீழ் முகமது பைசான், மற்றும் அவருடைய நண்பர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கீழ்வேளூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. தலைவர், துணைத்தலைவர், இணைச் செயலாளர், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு இரு நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அணைகள் நிலவரம்
பவானிசாகர் அணையில் 58.36 அடி வரை நீர்மட்டம் உள்ளது. மொத்த நீர்இருப்பு -6.7 டிஎம்சி ஆகும். நீர்வரத்து -174 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் -205 கன அடியாகும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.28 அடி உள்ளது. நீர் இருப்பு 11. 72 டி.எம்.சி. ஆகும். நீர் வரத்து (233) கன அடியாக உள்ளது. 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights