Tamil Nadu news today updates : ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என தமிழில் மேற்கோள் காட்டி ஐ.நா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அதோடு பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார்.
இன்று மழை வாய்ப்பு இந்த மாவட்டங்களுக்கு மட்டுமே!
தமிழக இடைத்தேர்தலில் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். சுபஸ்ரீ உயிரிழந்த பேனர் விவகாரத்தில், அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாதத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வழக்கத்தை விட 53 சதவீதம் மழைபொழிவு அதிகரிப்பு. வட கிழக்கு பருவமழை இயல்பாக பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இணைக்காதவர்களில் பான் கார்டு செல்லாது என அறிவிப்பு.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, political events : சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பிரதமர் மோடி தமிழர் மீதும், தமிழகத்தின் மீதும் தனி அன்பு வைத்துள்ளார்
தமிழர்கள் தான் மூத்தகுடி என்பதை ஐ.நாவில் பிரதமர் மோடி நிரூபித்துக் காட்டியுள்ளார்
மக்களுக்கு புரிதல், விழிப்புணர்வு இல்லாததால் 8 வழிச்சாலை அமைப்பதில் தாமதம்
தமிழகத்தில் கூகுள் இல்லாமல் வாழமுடியும், அமெரிக்காவில் கூகுள் இல்லை எனில் தாய், தந்தையை மறந்துவிடுவார்கள்
-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
காஞ்சிபுரத்தில் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை கைது செய்தது தனிப்படை
சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் ஜெயகோபால் கைதான நிலையில் அவரது மைத்துனர் மேகநாதன் கைது.
அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது
முதல்வரும், துணை முதல்வரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சியை நடத்தி வருகின்றனர்
தமிழக அரசின் திட்டங்களை எந்த எதிர்க்கட்சிகளாலும் குறை சொல்ல முடியாது
- அமைச்சர் செல்லூர் ராஜூ
கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது
ஐ.நா.வில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு 130 கோடி இந்தியர்களே காரணம்
அமெரிக்காவில் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
- பிரதமர் மோடி
தமிழகத்தில் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களும், தங்கள் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் ஒரே பெயர் மற்றும் முகவரியில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என நீட் தேர்வை நடத்தும் என்டிஏ-வுக்கு சிபிசிஐடி கடிதம்
கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி தந்ததாக ஞானவேல்ராஜா கூறியது பொய். கமலுக்கு ரூ.10 கோடி கொடுத்ததற்கான ஆவணங்களை உடனே சமர்ப்பிக்க வேண்டும்; இல்லையென்றால் புகாரை திரும்பப்பெற வேண்டும். ஆதாரத்தை தர தவறும்பட்சத்தில் ஞானவேல்ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.
குரூப் - 2 தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மொழிப்பாடம் நீக்கப்பட்டது தமிழ் வழி மாணவர்களை வடிகட்டுவதற்கான முயற்சியே என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இன்று சந்தித்து பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலினுடன் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சந்திப்பு#MKStalin pic.twitter.com/MKWeCRbLLM
— Thanthi TV (@ThanthiTV) September 28, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தேமுதிக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு விஜயகாந்தை அமைச்சர்கள் சந்தித்த நிலையில் தேமுதிக ஆதரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாவட்ட முதன்மை நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாக செயல்படும்
இதர மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக செயல்படுவார்
- அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை பிரதமர் மோடி கூறியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன், தமிழும் தமிழ் சார்ந்த தத்துவங்களும் உலகத்தில் என்றும் நிலை நிற்கக்கூடியவை, திமுக - காங்கிரஸ் கூட்டணி கொள்கை மகத்தானது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழகம், கர்நாடகாவிடம் பலமுறை பேசியும் வெற்றியடையவில்லை
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தெளிவான அரசியல் கண்ணோட்டம் மட்டுமின்றி தொழில்நுட்பமும் வேண்டும்
தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளேன்
- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்தது . அதன்படி, குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு, பல அரசியல் தலைவர்கள் கண்டனமும் , வாழ்த்துமும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் தலைவரான ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், தமிழ்மொழிக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பைத் திரும்ப பெறாவிட்டால் திமுக சார்பில் இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தமிழகத்திற்கு எட்டு டிஎம்சி தண்ணீரைத் திறந்து விடவேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கோரிக்கை ஒன்ரை வைத்திருந்தார் . இந்த கோரிக்கையை ஏற்று சில நாட்களுக்கு முன், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறந்து வைக்கப்பட்டது. திறந்து விடப்பட்ட நீர் தற்போது தமிழக எல்லையான ஜீரோ பாய்ண்டை சேர்ந்திருக்கிறது.
சவுதி மன்னர் கொடுத்த பிரைவேட் ஜெட் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியூ யார்க் வந்தார். அங்கு நியூ யார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று உரையாடினார். இன்று, அந்த சவுதி ஜெட்டின் மூலம் பாகிஸ்தான் செல்லும் போது பழுது எற்பட்டதால் மீண்டும் நியூ யார்க் நகரத்திற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்.
நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அக்டோபர் 1, செவ்வாய்க்கிழமை முதல், 370 வது பிரிவின் திருத்தத்தை சவால் செய்யும் அனைத்து மனுக்களையும் விசாரிக்க உள்ளது. மத்திய அரசாங்கம் ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது என்பது குறிப்பிடத் தக்கது.
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் சில நாட்களுக்கு முன்பு உதித் சூர்யா என்ற மாணவரை கைது செய்ததது சிபிசிஐடி போலீஸ் . இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்த இர்பான் என்ற மாணவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை தற்போது நடத்தி வருகின்றனர். இந்த இர்பான் சில நாட்களாகவே கல்லூரிக்கு வர வில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்கள் படிக்கும் மாநிலம் தமிழகம் – அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, உயர்கல்வித்துறையில் தமிழகம் 49% பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.
புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்., சார்பாக ஜான் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எல்எல்ஏவு.,ம், டில்லி காங்., சிறப்பு பிரதிநிதியாகவும் இருப்பவர் ஜான்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. நாராயணசாமி புதுச்சேரி முதல்வர் ஆவதற்காக நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் தான் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் என்னைவிட புத்திசாலிகள் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய தமிழிசை கூறியதாவது, இறைவன் அருள் இன்றி ஒரு நொடி, ஒரு அடி எடுத்து வைக்க முடியாதுஎன்று கூறினார்.
அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் அடுத்தவாரம் துவங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, அரசுக்கு நடப்பாண்டில் ஏற்பட்டுள்ள நிதிச்சுமை ரூ.14 ஆயிரம் கோடி. இதையெல்லாம் தாண்டிதான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் திதி கொடுத்தனர். பக்தர்கள் நலன் கருதியும், கூட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்கவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள்
பேரானந்தம் பிரதமர் அவர்களே.
தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால்
நன்றி உரைப்போம் நாங்களே.
*
You referred immortal verses from Tamil in the UN.
Blissful, Dear Prime minister. @PMOIndia
Thankful, we shall be if you rise up Tamil in homeland too.— வைரமுத்து (@vairamuthu) September 28, 2019
”பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகண்டு வருகிறோம். பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி வருகிறது" என சேலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.
நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகர் பற்றிய முழு விபரங்களையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு: யார் இந்த ரூபி மனோகரன்?
சுபஸ்ரீ வழக்கில் பழனி(50), சுப்பிரமணி(50) சங்கர்(35), லட்சுமிகாந்த்(38) என மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொடி கட்டுவது, பேனர் வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயகோபால் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க திணறிக்கொண்டிருந்தது. குமரி அனந்தன் உள்ளிட்டோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பாளர் தேர்வில் உள்ளூர் பிரமுகர்கள் போர்க்கொடி உயர்த்திக்கொண்டிருக்க, நேற்று ( 27ம் தேதி) காங்கிரஸ் தலைமை, ரூபி மனோகரனை, வேட்பாளராக அறிவித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights