Tamil Nadu news today updates : தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்படவுள்ள நிலையில் நகரவாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுவிட்டனர். இதனால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் சென்னை இன்று வெறிச்சோடியது.
திருச்சியில் ஆழ்துளை கிணற்றி விழுந்த சிறுவன் சுர்ஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்று ஓட்டு மொத்த தமிழகமும் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுக் குறித்து முழு தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்க்கு ஊழல் வழக்கில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த பிகில், கைதி திரைபப்டங்களை பார்க்க இன்று தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில் கைதி திரைப்படம் அனைவரும் வரவேற்கும் படமாக மாறியுள்ளது.
Tamil Nadu news today : ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், கோவா மாநில ஆளுநராக நேற்று இரவு மாற்றப்பட்டார்.
தீபாவளி அன்று சிறப்பு பூஜையில் லட்டு பிரசாதம் வழங்கப்படாது என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளிக்கு மதுக்கடைகளை மூடுங்கள் என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Happy Diwali 2019 Wishes Images
மத்திய அரபிக் கடலில் தத்தளித்த 32 தமிழக, கேரள மீனவர்களை இந்திய கடற்படை மீட்டது.
தமிழக அரசு அளித்த தகவலின் பேரில் மீனவர்களை மீட்டு கோவா அழைத்துச் செல்கிறது இந்திய கடற்படை.
”மக்கள் மற்றும் அமைப்புகளை தனது கட்டுப்பாடில் கொண்டுவர பாஜக அரசு முயன்றது மக்கள் மீண்டும் அமைப்புகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன” என்று ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.
இதுப்போன்ற அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் லிங்கை பின் தொடருங்கள்.
Web Title:Tamil nadu news today live updates diwali chennai weather politics bigil sujith
ஹரியானா முதல்வராக 2வது முறையாக நாளை பிற்பகல் 2.15 மணிக்கு பதவியேற்கிறார் மனோகர்லால் கட்டார் . துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்கிறார் . இதற்கான ஏற்பாடுகள் இன்று முதல் தொடங்கியது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பீலா ராஜேஷ் கோரிக்கை வைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டு, கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும் இது வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்து நிறுவனங்கள் மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பேருந்து நிறுவனங்கள், மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவா கடலில் தத்தளித்த எல்சடாய் சீதாப் சாரோன் படகில் இருந்த குமரி மீனவர்கள் 32 பேர் கோவாவில் கரை சேர்ந்தனர். தமிழக அரசு அளித்த தகவலின் பேரில் மீனவர்களை மீட்டு இந்திய கடற்படை கோவா அழைத்து சென்றனர். மீனவர்கள் அனைவரும் இந்திய கடற்படை துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவர் முருகனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நளினி அதிருப்தியில் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ முத்தமிழ் செல்வன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தீபாவளி திருநாளையொட்டி மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.
சதுரங்க வேட்டை படத்தை போன்று மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி திமுவுக்கு தகுந்த பாடமாக மாறி இருக்கிறதும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில ஆய்வு செய்ய மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கேட்டது. தற்போது, அதற்கான அனுமதியை, மத்திய அரசு அளித்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் கைரேகைப் பதிவை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் ஏற்கனவே ஆள்மாற்றாட்டம் தொடர்பான வழக்குக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிற்பித்துள்ளது.
ஹரியானாவில் பாஜக தலைமையிலான ஆட்சியில் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக. ஜனநாயக ஜனதா கட்சி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை துஷ்யந்த் சவுதாலா சந்தித்த நிலையில் கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.