Tamil nadu news today updates Wuhan virus : வுஹானில் பரவி வரும் வைரஸ் நோய் தொற்றினால் இதுவரை 59 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுஹானில் பரவி வரும் கொரோனாவைரஸ் நோய் தொற்று சீனாவில் துவங்கி உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் பீதியை கிளப்பி வருகிறது. விமான நிலையங்களில் கண்காணிப்பு ஏற்பாடுகளும், மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் தயாராகி வருகின்றது. இந்நிலையில் 2000 பேர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என்றும், அதில் 59 உயிரிழந்துள்ளனர் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (China's National Health Commission) அறிவித்துள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
இந்தியாவில் நோய் தொற்று இல்லை
137 விமானங்கள் மூலம் சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய 29,707 பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 26ம் தேதி சோதனை செய்யப்பட்ட 4359 பயணிகளிடமும் நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்துள்ளது இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
சி.ஏ.ஏவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் தீர்மானம்
இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையின மக்களுக்கு மட்டும் இந்தியாவில் குடியுரிமை வழங்கும் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கேராளாவில் 620 கிலோ மீட்டர் நீளத்திற்கு மனித சங்கிலி ஊர்வலம் நடத்தப்பட்டது. தற்போது ஐரோப்பிய யூனியனில் சில உறுப்பு நாடுகள் சி.ஏ.ஏ மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Live Blog
Tamil nadu news today updates Wuhan virus : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில், உயரலை எழும்பும் இடங்களில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் எத்தனை என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி மற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மு.க.அழகிரியின் பிறந்தநாள் வருகிற 30-ம் தேதி அவருடைய ஆதரவாளரகளால் கொண்டாடப்படுகிறது. மு.க.அழகிரியை வாழ்த்தி அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள், திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்சியை மீட்க வா, வெற்றிடத்தை நிரப்பு, சன்னின் சன்னுக்கே தடையா?, ராசியானவர், துரோகம் போன்ற வாசகங்கள் அடங்கிய வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதமபரம் அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்: புகழ்மிக்க தலைவர்களை முழுமையாக அறியாமல், ஓரிரு நிகழ்வுகளை வைத்து, ரஜினிகாந்த் விமர்சிப்பது தவறு. பொது வாழ்க்கைக்கு வர விரும்பும் ரஜினிகாந்த், தற்போதைய குடியுரிமை சட்டம், பாபர் மசூதி குறித்து கருத்து கூறாமல், 50 ஆண்டுகளுக்கு முந்தையை சம்பவத்தை கிளப்பி, சர்ச்சையை ஏற்படுத்துவது பொருத்தமாக தெரியவில்லை என்று கூறினார்.
ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. இதையடுத்து, 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதனை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கடந்த காலங்களில் காகித முறையில் நடைபெற்று வந்த கணக்கெடுப்பு பணி இந்த முறை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக மத்திய பாஜக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பேனர் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்? என அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக, திமுக தவிர மற்ற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. சட்ட விரோத பேனர் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? என்பதை ஆராய்ந்து, உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
"மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு மட்டுமே என்பதிலிருந்து பின்வாங்க போவதில்லை" என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு கருத்துத் தெரிவித்துள்ளது. நீ்ட் தேர்வை கட்டாயமாக்கியதை எதிர்த்து வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, ”கேரள முதல்வர் பினராயி விஜயன், நரேந்திர மோடிக்கும் அமித் ஷாவுக்கு ஏஜெண்ட்டாக பணியாற்றுகிறார் கவர்னர் என்றும், அவர் மாநில சட்டமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிராக நடந்து கொள்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அசாம் குடிமக்கள் பதிவேடான என்.ஆர்.சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் இடம்பெறவில்லை என புகார் எழுந்துள்ள நிலையில் இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என முக ஸ்டாலின் பேச்சு
“தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும்!” - மு.க.ஸ்டாலின்
Youtube Subscribe ➤ https://t.co/VbbiKldHHT | #MKStalin | #TamilNadu | @mkstalin | @CMOTamilNadu pic.twitter.com/CeI9vwWSdo
— News7 Tamil (@news7tamil) January 27, 2020
மக்கள் நடமாட்டமிக்க காந்தி மார்க்கெட்டில் பாலக்கரை மண்டல பாஜக செயலளார் விஜயரகு படுகொலை செய்யப்பட்டுள்ளார். விஜயரகுவை ஏற்கனவே மிட்டாய்பாபு என்பவர் கொலை செய்ய முயன்று சிறை சென்றார். சமீபத்தில் வெளியே வந்த அவர் விஜயரகுவை கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் ஹெச். ராஜா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது உச்சநீதிமன்றம். வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் முறையிட முகேஷின் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்.
அரசிடம் பணம் இல்லை என்றால் அரசு இப்படி தான் நம்மிடம் இருக்கும் சொத்துகளை எல்லாம் விற்கும். வளர்ச்சி 5% க்கும் குறைவாக உள்ளது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிதி இன்னும் சரியாக சேர்க்கப்படவில்லை, நம்முடைய அரசிடம் பணம் இல்லாததால் அரசு இப்படி அனைத்தையும் விற்கிறது என கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வழக்கறிஞர் கபில் சிபில்
களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சமீமிடம் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். திருவனந்தபுரம் மற்றும் சென்னையிலிருந்து வந்துள்ள அதிகாரிகள், நாகர்கோவிலில் உள்ள நேசமணி நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த வன்முறையில் அங்கிருந்த கணினிகள் சேதப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று இலவச அனுமதி வழங்கப்பட்டது. இன்றும் செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடியில் 2வது நாளாக இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களில் ஒருவரான ஒமர் அப்துல்லா புகைப்படம் வெளியானது. இதனை பார்த்து வருத்தம் தெரிவித்த முக ஸ்டாலின், மெகபூபா முஃப்தியின் நிலை குறித்தும் அதிக கவலை கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.
Deeply troubled to see this picture of @OmarAbdullah
Equally concerned about Farooq Abdullah, @MehboobaMufti & other Kashmiri leaders who are incarcerated without trial or due process.
Union Govt must immediately release all political prisoners and restore normalcy in Valley. pic.twitter.com/JaPBf2EFJJ
— M.K.Stalin (@mkstalin) January 27, 2020
TNPSC group 4 malpractice
சென்னையை சேர்ந்த ஓம் காந்தன் என்பவரின் உதவியால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட தேர்வுத்தாள்களில் ஒரே நாள் இரவில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு உணவுக்காக நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து தேர்வுத்தாள்கள் திருடப்பட்டு, திருத்தப்பட்டு, காலை தேநீர் குடிப்பதற்காக நிறுத்தப்பட்ட வாகனத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க : குரூப் 4 முறைக்கேடு : சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற சதி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights