Advertisment

News Highlights: இன்று அதிமுக பொதுக்குழு; தேர்தல் வியூகம் பற்றி ஆலோசனை

Tamil News Today : 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்

author-image
WebDesk
New Update
News Highlights: இன்று அதிமுக பொதுக்குழு; தேர்தல் வியூகம் பற்றி ஆலோசனை

Tamil News : அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை காலை 8.50 மணிக்கு கூடுகிறது.

Advertisment

கூட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 302 பேர் பங்கேற்கிறார்கள். பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட மொத்தம் 3,500 பேர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக சட்ட சபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் நாளை நடைபெறும் பொதுக்குழு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி. நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என முதற்கட்ட தகவல்

வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு" -வருமான வரி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல் சசிகலா விடுதலையாக உள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் சசிகலா தரப்பு வலியுருத்தல்.

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதித்திருப்பது விதிமீறல் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாகடிதம் எழுதியுள்ளார்.கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட தளர்வுகளுடன் கூடிய கொரோனா நெறிமுறைகளில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக அஜய் பல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள மத்திய உள்துறை செயலாளர்,மத்திய அரசின் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனக்கூறி, தமிழக அரசு விதித்த உத்தரவை மாற்றி பிறப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.

Live Blog

Tamil News Updates : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.



























Highlights

    22:12 (IST)08 Jan 2021

    ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் 15 ஆம் தேதி நடைபெறும்

    புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லியில் இன்று நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததையடுத்து, அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    20:00 (IST)08 Jan 2021

    பொங்கல் பண்டிகைக்கு, 16 , 221 பேருந்துகள் இயக்கப்படும் - விஜயபாஸ்கர்

    பொங்கல் பண்டிகையை ஒட்டி, 16 ஆயிரத்து 221 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    18:49 (IST)08 Jan 2021

    புதிய கொரோனா நோய் தொற்றால் 82 பேர் பாதிப்பு

    இங்கிலாந்தில் தோன்றிய புதிய கொரோனா நோய் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,139 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது நாட்டில் 2,25,449 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

    18:28 (IST)08 Jan 2021

    திரை அரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் அறிவிப்பு வாபஸ் - தமிழக அரசு

    திரை அரங்குகளில் 100% பார்வையாளர்களுடன் இயங்கும் அரசாணையை தமிழக அரசு வாபஸ் பெற்றது.      

    18:13 (IST)08 Jan 2021

    பிரதமர் மோடி இரங்கல்

    பேராசிரியர் சித்ரா கோஷின் மறைவிற்கு பிரதமர் மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

    18:11 (IST)08 Jan 2021

    விவசாயிகள் போராட்டம்: எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது

    புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது .

    17:51 (IST)08 Jan 2021

    அதிமுகவினரிடம் ஜெயலலிதா எப்படி இறந்தார் என கேளுங்கள் - உதயநிதி ஸ்டாலின்

    அதிமுகவினரிடம் ஜெயலலிதா எப்படி இறந்தார் என கேளுங்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    17:45 (IST)08 Jan 2021

    அதிமுக பொதுக்குழுவுக்கும்சசிகலாவிற்கும் சம்பந்தமும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு

    தமிழகத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் பணிகள் குறித்து ஆலோசிக்கவே பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்கும் சசிகலா வெளியே வருவதற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

    17:42 (IST)08 Jan 2021

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்து - தமிழக அரசு

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊருக்கும் செல்லும் வகையில், 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    17:40 (IST)08 Jan 2021

    அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 15ஆம் தேதி நடைபெறும் - மத்திய அரசு

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 15ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    17:19 (IST)08 Jan 2021

    பணி நிரந்தரம் கோரி முதல்வர் வீட்டின் முன் தர்ணா போராட்டம்

    2012 ம் ஆண்டில் பகுதிநேர ஆசிரியர் தேர்வில் தேர்வான நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி சேலத்தில் முதல்வர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்         

    16:39 (IST)08 Jan 2021

    பள்ளிகள் மூடியிருக்கும் போது தியேட்டர்களில் 100% அனுமதியா?

    தமிழகத்தில் தியேட்டர்களில் 100 % இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாணைக்கு வந்தபோது, பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% அனுமதியா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    16:36 (IST)08 Jan 2021

    இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை

    இந்தியாவில் பறவைக் காய்ச்சல் அபாயம் பெரும அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.

    16:27 (IST)08 Jan 2021

    பிரிட்டனில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை - டெல்லி முதல்வர்

    பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பினால் அங்கிருந்து  டெல்லி வரும் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர் -என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    16:24 (IST)08 Jan 2021

    விவசாயிகளுடன் 8-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயராகும் மத்திய அரசு

    மத்திய அரசின் வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு 8ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியள்ளது.

    16:22 (IST)08 Jan 2021

    100 % இருக்கை விவகாரம் - மைச்சர் கடம்பூர் ராஜூ

    தியேட்டரில் "100 % இருக்கை தொடர்பான விவகாரத்தில், முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வர் முடிவை அறிவிப்பார்"என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    16:20 (IST)08 Jan 2021

    மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை

    மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பரிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் லக்விக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    12:52 (IST)08 Jan 2021

    இந்தியாவில் புதிய வகை கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 82-ஆக உயர்வு

    இந்தியாவில் புதியவகை கொரோனா தொற்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 82ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 71 பேர் உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:43 (IST)08 Jan 2021

    அஞ்சல் துறை தேர்வில் தமிழ் சேர்க்கப்படும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

    மத்திய அரசின் அஞ்சல் துறை தேர்வில் தமிழ் மொழி கட்டாயம் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் முருகன்  ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால், வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    12:41 (IST)08 Jan 2021

    கொரோனா தடுப்பூசி குறித்து ராஷ்டிரிய ஜனதா தலைவர் கருத்து

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக் கொண்ட பிறகு நாங்கள் செலுத்திக் கொள்கிறோம் என்று ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

    12:39 (IST)08 Jan 2021

    மாஸ்டர் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

    மாஸ்டர்’ படத்தை சட்டவிரோதமாக 400 இணையதளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

    12:33 (IST)08 Jan 2021

    திரையரங்குளில் 100% இருக்கை தொடர்பான வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

    திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக வரும் 11ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  தமிழக அரசு பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    11:03 (IST)08 Jan 2021

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய அரசு பிரதிநிதி!

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய அரசு பிரதிநிதியாக பாஸ்கர் ராமமூர்த்தி நியமனம் . மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு  பாஸ்கர் ராமமூர்த்தி தற்போது, சென்னை ஐஐடியின் இயக்குனராக உள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும், சென்னை ஐஐடி இயக்குனராகவும் செயல்படுவார்

    11:03 (IST)08 Jan 2021

    எட்டு வழிச்சாலை திட்டம், உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

    சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டம், உச்சநீதிமன்றத்தில் புதிய மனு . உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல்  சேலம் அயோத்தியபட்டினத்தை சேர்ந்த யுவராஜ் மறுஆய்வு மனு தாக்கல் செய்துல்ளார். 

    11:02 (IST)08 Jan 2021

    மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புகழாரம்!

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது  மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புகழாரம்.   கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி .  கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் பாராட்டுக்கள். 

    09:36 (IST)08 Jan 2021

    பிரிட்டன் - இந்தியா விமான சேவை!

    உருமாறிய கொரோனா பரவல் காரணமாக கடந்த 23ம் தேதி பிரிட்டன் - இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டது .ரிட்டன் - இந்தியா இடையிலான விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. 

    09:35 (IST)08 Jan 2021

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் ஆய்வு!

    சென்னையில் நடைபெற்றுவரும் தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் ஆய்வு செய்து வருகிறார் . அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆய்வு

    08:41 (IST)08 Jan 2021

    கொரோனா தடுப்பூசி!

    நாடு முழுவதும் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது

    08:41 (IST)08 Jan 2021

    சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு!

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது . தமிழகம் முழுவதும் 190 இடங்களில் ஒத்திகை நடைபெறுகிறது . சென்னையில் நடைபெறும் ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்கிறார். 

    Tamil News : விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

    நேற்றைய செய்திகள்

    அமேசான் நிறுவனரை முந்தி உலகின் முதல் பணக்காரர் ஆனார் டெஸ்லாவின் சிஇஓ எலோன் மஸ்க் . சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் 10,913 பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

    பொள்ளாச்சியில் ஜன.10ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்.

    சென்னை மெரினாவில் 900 ஸ்மார்ட் கடை ஒதுக்கீடு செய்ய ஜனவரி 20,21 -ல் குலுக்கல் முறையில் தேர்வு. குலுக்கல் நடைபெறும் இடம், நேரம் பின்னர் அறிவிக்கப்படும் .சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment